Friday 9 March 2018

உரோமை நகர் புனித பிரான்சென்ஸ்


       ஒவ்வொரு நாளும் இறைவனின் திருவுளம் ஆர்வமுடன் தேடி அவரது விருப்படி வாழ்ந்தவர். செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் பிறந்தாலும் ஏழ்மையை ஆர்வமுடன் ஏற்றுக்கொண்டவர். டவுளின் இறையாட்சி பணியை இரக்கச் செயல்கள் அன்பு பணிகள் செய்ய ஆவல் கொண்டு வாழ்ந்தவரே உரோமை நகர் புனித பிரான்சென்ஸ். இவர் செல்வந்தக் கடும்பத்தில் 1384ஆம் ஆண்டு பிறந்தார்.


           பிரான்சென்ஸ் குழந்தைப்பருவம் முதல் இறைவனின் திருவுளம் அறிந்து செயல்பட்டவர். இறைபக்தியில் வளர்ந்து வந்தார். துறவு வாழ்க்கை வாழ தனது பெற்றோரிடம் கூறிபோது அவர்கள் மறுத்து பணக்கார வலிபருக்கு 12ஆம் வயதில் திருமணம் செய்து கொடுத்தார். இறைவனின் திருவுளம் இதுவே என்றாலும் திருமணத்திற்குப் பின் பட்டினி கிடந்து அழுதார். நிம்மதியின்றி இறைவனுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்ய இயலவில்லையே என்று மனம் வருந்தினார். 


       பிரான்சென்ஸ் நோயுற்று படுத்தப்படுக்கையானார். புனித அலெக்ஸ்சியார் காட்சி கொடுத்து குணப்படுத்தினார். பிரான்சென்ஸ் துறவு வாழ்க்கை வாழ விரும்புவதை அவரது கணவர் உணர்ந்து கொண்டு அன்புடன் வழிநடத்தினார். கடவுளின் அன்பு பணிகள் செய்ய விரும்பியபோது மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை அன்புட் கவனித்துக்கொண்டார். சிறைகைதிகளை சந்தித்துஇறைவார்த்தையை எடுத்துரைத்து நல் வழிகாட்டினார். உரோமையில் வெள்ளபொருக்கு ஏற்பட்டு பஞ்சம் ஏற்பட்டபோது பசியால் துன்புற்ற மக்களுக்கு உதவினார். தனது கணவரின் உதவியுடன் பொதுநிலை பெண்களுக்கு துறவு மடம் ஆரம்பித்தார். ஏழைகளுக்கு அன்பு பணி செய்த பிரான்சென்ஸ் 1440ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment