Sunday 18 March 2018

புனித எருசலேம் நகர் புனித சிரில்


      கடவுள்மீது நம்பிக்கை கொண்டு கற்பு நெறியில் சிறந்து விளங்கியவர். ஒறுத்தல் முயற்சிகளால் இறைவனை மாட்சிப்படுத்தியவர். திருச்சபையில் நிலவிய தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்.  திருச்சபையின் சொத்துகளை பாதுகாத்தவர். நற்செய்தியை ஆர்வமுடன் அறிவித்து கிறிஸ்துவின் இறையாட்சியை மண்ணில் நிறுவி வாழ்ந்தவரே புனித சிரில். இவர் 315ஆம் ஆண்டு எருசலேமில் பிறந்தார்.

       சிரில் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்துவின் உண்மை சீடராக கற்பு நெறியை பின்பற்றி உண்மைக்கு சான்று பகர்ந்தவர். தனது வீட்டில் தங்கி துறவு வாழ்வை மேற்கொண்டார். கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் செய்வதில் கருத்துடன் செய்பட்டார். ஒறுத்தல் முயற்சிகள் கடைப்பிடித்து தியானம் செய்து வாழ்ந்தார். இறைவன் தன்னை குருத்துவ வாழ்வுக்கு அழைப்பதாக உணர்ந்து குருத்துவ வாழ்வுக்கு தன்னை அர்ப்பணித்தார்.

    இறையியல் கல்வி கற்று குருவாக அருட்பொழிவு பெற்றார். ஆயர் மாக்சிமுஸ் இறந்ததும் சரில் ஆயராக அருள்பொழிவு பெற்றார்.சிரில் திருச்சபையில் நிலவிய தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். திருச்சபையிலன் விசுவாச கோட்பாடுகளை இறைமக்கள் பின்பற்ற வழிகாட்டினார். பற்பல துன்பங்களை ஏற்று திருச்சபையை பாதுகாத்தவர். பனித சரில் இவர் 386ஆம் ஆண்டு இறந்தார்.


No comments:

Post a Comment