Saturday 7 July 2018

புனித பான்றேஸ்


     நற்செய்தி அறிவிக்க தனது வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணம் செய்தவர். நிறைவான இறைஞானமும்,    அறிவுதிறனும் பெற்ற வேளையில் தாழ்ச்சியுடன் வாழ்ந்தவர். இறையனுபவத்தால் தன் வாழ்வை நெறிப்படுத்தி இறைவனுக்கு உகந்ததோர் வாழ்கை வாழ்ந்தவர். அமைதியின் கடவுளை சொந்தமாக்கி அமைதியாக வாழ்ந்தவர். தன்னிடம் வந்த மக்களை இறையன்பால் நிறைத்தவரே புனித பான்றேனஸ். இவர் இத்தாலி நாட்டில் பிறந்தவர்.  சாக்ரடீஸ் கொள்கையை பின்பற்றி வாழ்ந்தார். கிறிஸ்துவின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு இறைஞானம் பெற்று கிறிஸ்துவின் சீடராக வாழ்ந்தார். கிறிஸ்தவ கோட்பாடுகளை நன்கு கற்றுக்கொண்டார். திருத்தூதர்களின் சிந்தனைகள் பெற்று மக்களுக்கு போதித்தார். பான்றேனஸ் நற்செய்தி அறிவிக்க இந்தயா வந்ததாக வரலாறு கூறுகிறது. கிறிஸ்துவின் பாதத்தடங்களில் நடந்து ஓர் இறைவாக்கினராக இறையாட்சி பணி செய்த பான்றேனஸ் 216ஆம் ஆண்டு இறந்தார்.

No comments:

Post a Comment