Saturday 21 July 2018

புனித பிரின்டிசி லாரன்ஸ்

     விவிலியத்தை நன்கு கற்று வாழ்வில் பின்பற்றியவர். பக்தியுள்ள கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்தவர். ஒவ்வொரு நிடமிடமும் கிறிஸ்துவின் துன்பங்களில் பங்குசேர்ந்து ஆன்மாக்களின் மீட்புக்காக தனது வாழ்வை அர்ப்பணம் செய்தவரே புனித பிரின்டிசி லாரன்ஸ். இவர் நேப்பிள்ஸில் 1559ஆம் ஆண்டு ஜøலை திங்கள் 22ஆம் நாள் பிறந்தார். இறைபக்தியில் வளர்ந்து வந்தார். தனது 16ஆம் வயதில் வெரோனாவில் உள்ள கப்புச்சியன் சபையில் சேர்ந்தார். இறைஞானம் மிகுந்தவராக காணப்பட்டார். 1596ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்று இறையாட்சி பணி செய்தார். விவிலியத்தை நன்கு கற்று யூதமக்களிடையே கிறிஸ்துவை அறிவித்தார். எண்ணற்ற மக்கள் மனம்மாறி திருச்சபையில் இணைந்தனர். 1602ஆம் ஆண்டு சபையின் தலைமை பொறுப்பேற்று சிறப்புடன் வழிநடத்தினார். திருத்தந்தையின் தூதுவராக பவாரியர் அரசவையில் சிறப்புடன் பணியாற்றினார். இறைவனுக்காகவே வாழ்ந்த பிரின்டிசி லாரன்ஸ் 1619ஆம் ஆண்டு இறந்தார்.

No comments:

Post a Comment