Tuesday 10 July 2018

ஜøலை .9 . புனித நிக்கோலாஸ் பெக்

   துறவு வாழ்க்கை வழியாக கிறிஸ்துவின் அடிமையாக வாழ்ந்தார். விண்ணக வாழ்வை இலக்காக கொண்டு வாழ்ந்தவர். தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். தாழ்ச்சியின் பாதையில் பயணம் செய்தவரே புனித நிக்கோலாஸ் பெக். இவர் ஹாலந்து போய்ஸ் லே துக் என்ற இடத்தில் 1534ஆம் ஆண்டு பிறந்தார். இறைபக்தியில் சிறந்து விளங்கினார். துறவு வாழ்க்கை வழியாக கிறிஸ்துவின் அடிமையாக வாழ்ந்தார். 1558ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்று இறையாட்சி பணியை சிறப்பாக செய்தார். தப்பறைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். திருச்சபையின் வளர்ச்சிக்காக அரும்பாடுப்பட்டார். அன்னை மரியாவின் மீது மிகுந்த பற்றும் பக்தியும் கொண்டு வாழ்ந்தார். நற்கருணையில் கிறிஸ்துவின் பிரசன்னம் இருப்பதை எடுத்துரைத்தார். இறுதியாக  வேதவிரோதிகளால் கொலை செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment