Saturday 14 July 2018

புனித கமில்லஸ் தெ லெல்லிஸ்

    இறைபக்தி வளர்ந்து முனமதியோடு செயல்பட்டவர். புனித பலிப்பு நேரியின் வழிகாட்டுதல் பெற்று புனிதராக மாறியவர். நோயளிகள் மீது மிகுந்த அன்பும் கருசனையும் கொண்டவர். இறைவல்லமையால் புதுமைகள் செய்யும் வரம் பெற்றவர். நற்செயல்கள் செய்தபோது ஏற்பட்ட துன்பங்களில் அன்னை மரியாவிடம் சரண் அடைந்து வெற்றி பெற்றவரே புனித கமில்லஸ் தே லெல்லிஸ். இவர் 1550ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்தார். இவரது தந்தை நெப்போலியன் போர்படையில் படைவீரராக பணியாற்றினார். தாயின் அன்பும் அரவணைப்பும் பெற்று வளர்ந்தார். தனது குழந்தைப்பருவத்தில் தாயை இழந்தார். தாயின் அன்பும் அரவணைப்பும் கிடைக்காமல் வந்தபோது வருத்தமுற்றார். 



       கமில்லஸ் தனது இளமைப்பருவத்தில் போர் படையில் சேர்ந்து பணியாற்றினார். படை முகாமில் சூதாட்டத்திற்கு அடிமையானார். போருக்கு சென்ற வேளையில் இரண்டு காயங்களிலும் காயங்கள் ஏற்பட்ட போது துன்புற்றார். இத்தருணத்தில் போர்களத்திலிருந்து வெளியேறி உரோமை நகரில் உள்ள மருத்துவமனை பணியாற்றினார். சில நாட்களில் மருத்துவ மனையின் பொறுப்பேற்று வழிநடத்தினார். ஏழை எளிய மக்களுக்காக இலவச உதவிகள் செய்தார். பல எதிர்ப்புகளை சந்தித்தார். கப்புச்சன் சபை துறவிகளோடு இணைந்து பணியாற்றினார். கப்புச்சன் சபை துறவியின் வழிகாட்டுதலால் பொதுநிலை சகோதரர் பிரிவில் சேர்ந்தார். கமில்லஸ் நற்பண்பில் வளர்ந்து வந்தார். மருத்துவ மனையில் பணியாற்றிபோது பல எதிர்ப்புகளை சந்தித்தார். 


    புனித பிலிப்பு நேரியின் வழிகாட்டுதல் குருத்துவ அருள்பொழிவு பெற்றுக்கொள்ள விரும்பினார். தனது 32ஆம் வயதில் உரோமையில் உள்ள இயேசு சபை கல்லூரியில் படித்து குருவாக அருள்பொழிவு பெற்றார். பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பணியாற்ற தீர்மானித்தார். அதன்பிறகு ஒரு சபையை நிறுவினார். அச்சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து, நோயாளிகளுக்குக்கென்று தன்னையே தியாகம் செய்தார். நோயாளிகளை தேடிச் சென்று பணிபுரிந்தார். பல தொற்று நோய் கொண்ட மக்களுக்கு பணியாற்றினார். இதனால் அச்சபையில் இருந்த குருக்களும் , தொற்று நோயால் தாக்கப்பட்டு இறந்தனர். மருத்துவமனைகளைக் கட்டி, நோயாளிக்கு தொண்டாற்றுவதே இச்சபையின் பணியாக இருந்தது. இறுதியாக தனது 64ஆம் வயதில் இவரும் நோயால் தாக்கப்பட்டு இறந்தார். 

No comments:

Post a Comment