Sunday 29 July 2018

புனித மார்த்தா

    புனித மார்த்தா  இயேசுவின் அன்பிற்கும், பாசத்திற்கும் துகுதியானவர். மரியா லாசர் என்பவர்கள் இவருடைய சகோதரர்கள். இயேசுவின் மீது அதிக அன்பும் பற்றும் கொண்ட மார்த்தா அவரை வீட்டிற்கு அழைத்து விருந்தளித்தார். தனது சகோதரன் லாசர் இறந்த வேளையில் இயேசு இல்லாதததை நினைத்து கண் கலங்கினார். மார்த்தா உலக காரியங்களில் அக்கறைக் கொண்டவராக யோவான் நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். இயேசுவின் முன்பாக தனது துக்கங்களை பகிர்ந்து கொண்டவர். ஆண்டவராகிய இயேசு மெசியாவாக நம்பி வாழ்ந்து அனைவருக்கும் நம்பிக்கையின் சாட்சியாக மாறினார். இலாசர் இறந்த வேளையில், ஆண்டவர் இயேசு அங்கு இல்லாமல் போனதை எண்ணி கலங்கினார். இதையறிந்த இயேசு விரைந்து மார்த்தாவின் இல்லத்தை அடைந்தார். அப்போது மார்த்தா ஆண்டவரிடம் "நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்கமாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார்", என்று முறையிட்டார். மார்த்தாவின் சகோதரி மரியா இவர் ஆண்டவரின் பாதம் அமர்ந்து அவர் சொல்வதை கேட்டு நல்லவற்தை தேர்ந்தெடுத்து வாழ்ந்தார்.

No comments:

Post a Comment