Monday 2 July 2018

புனிதர்கள் ப்ரோசெசு மற்றும் மார்டினியன்

     கிறிஸ்துவின் விழுமியங்களில் வாழ்ந்து இறையன்பிற்கு சான்று பகர்ந்தனர். புனித பவுல் புனித பேதுரு இவர்களின் போதனையால் ஈர்க்கப்பட்டு மனம்மாறி நற்சான்றுடன் வாழ்ந்தவர்கள். செபம் செய்வதில் தங்களை அர்ப்பணம் செய்தவர்கள். கிறிஸ்துவின் அன்பில் நாளும் வளர்ந்து இயேசுவின் திருவுடல், திருஇரத்தம் பருகி வாழ்ந்தவர்களே புனிதர்கள் ப்ரோசெசு மற்றும் மார்டினியன். இவர்கள் திருத்தூதர்களின் போதனையால் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இறையாட்சி பணி செய்தவர்கள். உரோமை கடவுளுக்கு தூபம் காட்டமறுத்தபோது சிறையில் அடைக்கப்பட்டார்கள். சிறை வாழ்வில் ஏற்பட்ட துன்பங்களை கிறிஸ்துவின்மீது கொண்ட அன்பின் காரணத்தால் ஏற்றுக்கொண்டார்கள். நீரோ மன்னன் கிறிஸ்தவ மக்களை துன்புறுத்தி மாமர்தீன் சிறையில் அடைத்தக் காலம். ப்ரோசெசு மற்றும் மார்டினியன் ஏற்றுக்கொணட காரணத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்கள். கிறிஸ்துவை மறுதலிக்குமாறு வற்புறுத்தினர். உரோமை கடவுளான ஜøபிடருக்கு தூபம் காட்டுமாறு வற்புறுத்தினர். அவர்களே இயேசுவின் திருநாமம் போற்றப்படுவதாக என்று கூரத்தக்குரலில் கூறினர். இக்காரணத்தால் அவர்களது தலை வெட்டப்பட்டு கொலை செய்தார்கள்.  

No comments:

Post a Comment