Wednesday 4 July 2018

போர்ச்சுக்கல் நாட்டு புனித எலிசபெத்

     கிறிஸ்துவின் அமைதியை நிறைவாக பெற்று அமைதியின் நிறைவில் வாழ்ந்தவர். கல்வி கற்பதில் சிறந்து விளங்கினார். அன்பு, அமைதி, இறைஞானம் ஆகியவற்றில் வளர்ந்து ஒழுக்கம் மிகுந்தவராக வாழ்ந்தவர். ஆன்மீக வாழ்வில் அக்கறை கொண்டு செபிப்பதில் ஆர்வம் செலுத்தியவர். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதில் கருத்துடன் செயல்பட்டவரே போர்ச்சுக்கல் நாட்டு புனித எலிசபெத். இவர் போர்ச்சுக்கல் நாட்டில் 1271ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஹங்கேரி நாட்டு எலிசபெத்தின் பேத்தியாகும்.


    எலிசபெத் அரண்மனையில் பிறந்து வாழ்ந்தாலும் செல்வாக்கு மிகுந்த வாழ்வை கைவிட்டு ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்தார். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வதில் ஆனந்தம் அடைந்தார். அறநெறி வாழ்விலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினார். நாளும் இறைபக்தியில் வளர்ந்து இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து இறைவனை மாட்சிப்படுத்தினார். எலிசபெத் தனது 12ஆம் வயதில் போர்ச்சுக்கல் நாட்டு இளவரசர் டென்னிஸ் என்பவரை திருமணம் செய்தார். அரண்மணையில் வாழ்ந்த மக்களிடம் அன்புடன் பழகினார்.


    சில நாட்களில் எலிசபெத் கணவரின் துன்புறுத்தலுக்கு உள்ளானார். தனிமையில் தவித்தபோது இவைனிடம் மன்றாடி அமைதி அடைந்தார். எலிசபெத்தின் செபத்தின் வல்லமையால் தனது கணவரை மனம்மாற்றினார். இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். தனது கணவரின் இறந்தப்பின் இல்லற வாழ்வை துறந்து மூன்றாம் பிரான்சிஸ் அசிசியார் சபையில் சேர்ந்து துறவு வாழ்வை மேற்கொண்டார். அமைதியின் தவித்த மக்களில் மனதில் இறையமைதி ஏற்படுத்திய எலிசபெத் 1336ஆம் ஆண்டு ஜøலை திங்கள் 4ஆம் நாள் இறந்தார். 

No comments:

Post a Comment