Wednesday 6 December 2017

குவாதலூப்பே அன்னை

மெக்சிகோ நகரில் 1531ஆம் ஆண்டு அன்னை மரியா தன்னை ஏழை விவசாயி யுவான் தியெகோவிற்கு வெளிப்படுத்தினார். யுவான் தியெகோ தனது மாமா பெர்னார்தினோ, திடீரென நோயினால் பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தார். அவருக்கு நோயில்பூசுதல் வழங்க குருவானவரை அழைத்துவர தேபியாக் குன்றின் அடியில் இருந்த சாலை வழியாக நடந்துக் கொண்டிருந்தார். இத்தருணத்தில் அன்னை மரியா அவருக்கு காட்சி கொடுத்தார். குன்றின் உச்சியில் சூரியனைப் போன்ற பிரகாசமான ஒளியின் நடுவில் அன்னை மரியா தோன்றி, அவரை குன்றின் உச்சியில் ஏறிவருமாறு அழைத்தார். விண்ணக ஒளியின் மத்தியில் அன்னை மரியா நின்றிருந்தார். யுவான் தியெகோவிடம் குன்றின்மீது ஆலயம் கட்ட ஆயரிடம் தெரிவிக்குமாறு கூறினார். தியெகோவும், ஆயரிடம் சென்று அன்னையின் விருப்பத்தைக் கூறினார். அப்போது ஆயர் அடையாளம் கேட்டார்.  யுவான் தியெகோ அன்னை மரியாவிடம் ஆயரின் மறுமொழியைக் கூறினார்.




         
            யுவான் தியெகோவிடம் உனது மாமா நோயிலிருந்து குணம் அடைவார், இறக்கமாட்டார். எனவே நான் உனக்கு மூன்று முறை காட்சி தந்த குன்றின்மீது பூத்துக்குலுங்கி இருக்கும் மலர்களைப் பறித்துக்கொண்டு வருமாறு கூறினார்
. பாறைகள் நிறைந்த குன்றின்மீது பூக்கள் மலர வாய்ப்பில்லை என்று தெரிந்தும் நம்பிக்கையுடன் குன்றின்மீது ஏறினார். அற்புதமான முறையில் மலர்ந்திருந்த மலர்களைப் பறித்து தனது மேற்போர்வையில் பொதிந்து அன்னையிடம் கொண்டு வந்தார். அன்னை மரியா அவற்றை ஆயரிடம் கொண்டு கொடுக்கக் கூறினார். ஆயர் நம்பும் அடையாளம் இதுவே. தியெகோ ஆயரிடம் சென்று தனது மேற்போர்வையைத் திறந்து காண்பித்தார். அப்போது மலர்கள் கீழே விழுந்தது, மேற்போர்வையில் அழகான அன்னை மரியாவின் திருவுருவம் பதிந்திருந்தது. ஆயரும் நம்பினார். இங்கு ஆலயம் கட்டப்பட்டது. இவ்வாலய அன்னை குவாதலூப்பே அன்னை என்று அழைக்கப்படுகிறார். 


No comments:

Post a Comment