Friday 29 December 2017

புனித தாமஸ் பெக்கட்


          திருச்சபையை அதிகம் அன்பு செய்தவர். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டவர். இறைவன் வழிநடத்தலை உணர்ந்து வாழ்ந்தவர். கிறிஸ்துவின் நிலைவாழ்வு தருகின்ற இறைவார்த்தைகளை ஆர்த்துடன் போதித்தார். இறையாட்சி பணி செய்ய நோன்பிருந்து செபித்து தன்னை தயார் செய்தவரே புனித தாமஸ் பெக்கட். இவர் லண்டன் மாநகரில் 1118ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 21ஆம் நாள் பிறந்தார்.

 தாமஸ் இறைபக்தியில் வளர்ந்து வந்தார். அன்னை மரியாவிடம் பக்தி கொண்டு தினமும் செபமாலை செபித்தார். பாரிஸ் பல்கலை கழகத்தில் சட்டம் மற்றும் திருச்சபை சட்டம் கற்றார். துணி வியாபாரம் செய்த பெற்றோர் நோயுற்று இறந்தனர். தாமஸ் குடும்ப பொறுப்பைக் கவனித்தார். திறமையும், ஞானமும், நற்பண்புகளும் நிறைந்த தாமஸ் ஷெரிப் நீதி மன்றத்தில் எழுத்தளராக பணியாற்றினார். இறைப்பணி செய்ய ஆவல் கொண்டார். பின் 1154ஆம் ஆண்டு திருத்தொண்டராக அருள்பொழிவு பெற்று தலைமை திருத்தொண்டராக உயர்ந்தார்.
  1155ஆம் ஆண்டு அரசர் இரண்டாம் ஹென்றியின் அரசவையில் அரசனுக்கு அடுத்த பதவியில் பணியாற்றினார். அரசருடன் தோழமையுடன் செயல்பட்டார். தாமஸின் திறமை மிகுந்த செயல்களினால் அரசரின் மனம் கவர்ந்தார். 1162ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்று அடுத்த நாள் பேராயராக பதவி ஏற்றார். அரசனின் விருப்படி செயல்படாத நிலை ஏற்பட்டது. அரசனுக்கும் பேராயருக்கும் இடையில் பிளவுகள் ஏற்றட்டன. தலைமை திருத்தொண்டர் பதவியிலிருந்து விலக அரசன் கூறினான். தமாஸ் அதற்கு இணங்கவில்லை.

      மறைமாவட்டத்திற்கு சொந்தமான தோட்டங்களை அரசன் தனதாக்க முயன்றான். பேராயர் தாமஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அன்புடன் உடையாடி விவேகத்துடன் பேசினார். அரசன் விரும்பிய நிலங்கள் கிடைக்கவில்லை. ஆத்தரம் அடைந்து கோபத்தில் புலம்பினான். 1170ஆம் டிசம்பர் 29ஆம் நாள் தாமஸ் ஆலயத்தில் செபித்துக் கொண்டிருந்தார். இத்தருணத்தில் கயவர்கள் நேரே பலி பீடத்திற்கு சென்று இறைவனோடு உரையாடிக் கொண்டிருந்த தாமûஸ வாளால் வெட்டி கொலை செய்தார்கள். 1173 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் நாள் திருதந்தை மூன்றாம் அலெக்ஸôண்டர் புனிதர் நிலைக்கு உயர்த்தினார். 

No comments:

Post a Comment