Saturday 23 December 2017

புனித தோர்லாக்


         இறைஞானம் மிகுந்த குருவாக இறையாட்சி பணி செய்தவர். கற்பு நெறியை கடைப்பிடித்து கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தவர். ஒழுக்கம் மிகுந்தவராய் தூய்மைக்கு சான்றாக வாழ்ந்தவர். இறைவனுக்கு தனது வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்தவரே புனித தோர்லாக். இவர் ஐஸ்லாந்தில் ஃபியாட்ஷில்த் என்னும் இடத்தில் 1133ஆம் ஆண்டு பிறந்தார்.

     இறைபக்தியில் சிறந்து விங்கிய தோர்லாக் தனது 18ஆம் வயதில் குருவாக அருள்பொழிவு பெற்றார். தவறுகள் செய்ய வாய்ப்புகள் தன்னை நெருங்கியத் தருணத்தில் இறைவனின் துணை நாடினார். தவறுகள் செய்யாமல் புனிதராக வாழ்ந்தார். தோர்லாக் இறைவனின் திருவுளப்படி உத்தம துறவியாக வாழ்ந்தார். 1178ஆம் ஆண்டு ஸ்கால்ஹோல்ட் மறைமாவட்டத்தின் ஆயராக திருப்பொழிவு பெற்று இறைமக்களை இறைவழியில் வழிநடதóதினார். சமூகத்தில் நிலவிய தவறுகளைக் கண்டித்தார். 
         

        குருக்களை அன்புடனும் பாசத்துடனும் வழிநடத்தினார். இறைமக்களுக்கு நல்வமிகாட்டி அறிவு புகட்டினார். திருச்சûயின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு உழைத்தார். ஏழை எளிய மக்களை அன்பு செய்தார். அன்னை மரியாவிடம் தனது மறைமாவட்டத்தை அர்ப்பணம் செய்து அன்னை அருள் பெற்று மக்களை வழிநடத்தினார். 1193ஆம் ஆண்டு ஆயராக இறைபணியாற்றி தோர்லாக் விண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து விண்ணக வாழ்வில் நுழைந்தார். 


No comments:

Post a Comment