Wednesday 20 December 2017

சிலோஸ் நகர புனித தோமினிக்


     
        இயேசுவின் அருகில் இருந்து அவருடன் பேசுகிறேன் என்று கூறியவர். சிறுவயது முதல் இறைபக்தியில் சிறந்து விளங்கியவர். தனிமையில் இருந்து இறைவனோடு உரையாடி மகிழ்ந்தார். இறைவனின் அருட்கரம் பற்றி நடந்தார். துயரத்தின் மத்தியில் இறைவனிடம் செபித்து ஆறுதல் அடைந்தவரே புனித தோமினிக். இவர் ஸ்பெயின் நாட்டில் 1000ஆம் பிறந்தார். சிறுவயது முதல் ஆடுமேய்கும் தொழில் செய்தார்.

         தினந்தோறும் ஆலயம் சென்று அன்னை மரியாவிடம் செபித்து நற்பண்பில் வளர்ந்து வந்தார். ஆடுமேய்கும் தருணத்தில் இறைவனிடம் உரையாடி மகிழ்ந்தார். இறைவன் அழைத்தபோது அவரது குரல் கேட்டு ஆசிர்வாதப்பர் துறவு சபையில் சேர்ந்தார். துறவற பயிற்சி பெற்று கற்பு, ஏழ்மை, கீழ்ப்படிதல் போன்ற வார்த்தைப்பாடுகள் வழியாக இறைவனுக்கு தன்னை முற்றிலும் அர்ப்பணித்து உத்தம துறவியாக வாழ்ந்தார்.
         நவாரா அரசன் மூன்றாம் கார்சியா சான்செஷ் என்பவர் துறவு இல்லத்தை அபகரித்தபோது அரசனுக்கு எதிராக குரல் கொடுத்தார். இறைநம்பிக்கையுடன் செபித்தார். காஸ்டில் நாட்டு அரசன் முதலாம் பெர்டினான்ட் துணையுடன் சிலோஸ் நகரில் துறவிகளுக்கு தலைமைத் துறவியாக தோமினிக் வழிநடத்தினார்.

         ஏழை எளிய மக்களில் ஒருவராக வாழ்ந்தார். இரக்கச் செயல்கள் வழியாக இறைவனை மாட்சிமைப் படுத்தினார். ஆன்மீக வாழ்வில் சிறந்து விளங்கி இறைமக்களுக்கு நல்வழி காட்டினார்.  நற்கருணை ஆண்டவரின் முன்பாக அமர்ந்து உரையாடினார். வாழ்நாள் முழுவதும் இரக்கமும், தாழ்ச்சியும், கற்பும் உள்ளவராக வாழ வேண்டுதல் செய்தார். மக்களோடு மக்களாக வாழ்ந்த தோமினிக் 1073ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 20ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment