Monday 18 December 2017

புனித வினிபால்ட்


         துறவு வாழ்க்கை வழியாக இறைவனை மாட்சிமைப்படுத்தியவர். இயேசு கிறிஸ்துவை கண் முன்பாக கொண்டு வாழ்ந்தவர். அர்த்தமுள்ள ஆன்மிக வாழ்க்கை வாழ தியான வாழ்வை பின்பற்றினார். இறைவனின் அருட்கரம் பற்றி நடந்து எண்ணற்ற நன்மைகள் செய்து வாழ்ந்தவரே புனித வினிபால்ட். இவர் இங்கிலாந்து நாட்டில் 702ஆம்ஆண்டு பிறந்தார். சிறுவயது முதல் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். 
      வினிபால்ட் உரோம் நகருக்கு திருபயணம் சென்றார். உரோம் நகரில் 7 ஆண்டுகள் கல்வி கற்றார். துறவு வாழ்க்கையின் மீது தாகம் கொண்டார். துறவு வாழ்க்கையின் முன் அடையாளமாக தனது உச்சந்தலையில் வட்டமாக மொட்டைஅடித்துக்கொண்டார். கிறிஸ்துவின் உண்மை சீடராக வாழ விரும்பினார். உயர் கல்வி முடித்து தாயகம் திரும்பினார். 
      அன்னை மரியாவின் மீது பக்தி கொண்டு வாழ்ந்தார். செபாலை வாழியாக தூய வாழ்க்கைக்கு தேவையான அருளை அன்னை மரியாவின் வழியாக பெற்றுக்கொண்டார். பெற்றோரின் வழிகாட்டுதலால் ஆன்மீக வாழ்வில் வளர்ச்சி அடைந்தார். குருத்துவ வாழ்வை தேர்ந்தெடுத்தார். குருவாக அருள்பொழிவு பெற்று ஜெர்மன் மற்றும் பவாரியா பகுதிகளுக்கு சென்று நற்செய்தியை அறிவித்தார். சிலைவழிபாட்டை அகற்றினார். தப்பறைகளுக்கு எதிராக குரல்கொடுத்தார்.

      ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தார். இறைமக்களின் நலன் கருதி எண்ணற்ற புதுமைகள் செய்தார். வினிபால்டின் தன்னலமற்ற பிறரன்பு பணிகளை விரும்பாதி எதிர்கள் அவரது உணவில் விஷம் கலந்தனர்.  இறைவனில் அருட்கரம் அவரோடு இருந்ததால் எத்தீங்கும் அவரை நெருங்கவில்லை. துறவு இல்லங்களை நிறுவினார். புனித ஆசிர்வாதப்பரின் விதிமுறைகளைப் பின்பற்றினார். துறவிகளிடம் இறைவனை கண் முன்பாக கொண்டு வாழுங்கள். எத்துன்பம் வந்தாலும் தூய்மைக்கு கலங்கம் ஏற்படால் வாழ வழிகாட்டிய வினிபால்ட்761ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் இறந்தார்.

No comments:

Post a Comment