Tuesday 19 December 2017

புனித நெமேசியுஸ்


   
கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டு அவருக்காக தனது வாழ்வை அர்ப்பணம் செய்தவர். துன்பத்தின் மத்தியில் இறைவனை புகழ்ந்து பாடினார். உயிர் போகும் அளவுக்கு கொடூரமான சித்திரவதைகளை கிறிஸ்துவுக்காக துணிவுடன் ஏற்றுக்கொண்டவரே புனித நெமேசியுஸ். இவர் எகிப்தில் 249ஆம் ஆண்டு பிறந்தார்.
   
          நெமேசியுஸ் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ்ந்தார். கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்ட காரணத்திற்காக அவரை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தினர். இவர் மீது பொய்யான குற்றங்களைச் சுமத்தினர். துன்பத்தின் மத்தியிலும் கிறிஸ்துவை அரசராக அறியிக்கையிட்டார். நெமேசியுஸ் வாழ்ந்த காலத்தில் கிறிஸ்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்து கிறிஸ்துவை மறுதலித்து சிலைகளுக்கு பலி செலுத்த வற்புறுத்தினர். சிலைகளுக்கு பலி செலுத்தாதவர்களின் உடமைகள் பரிமுதல் செய்து நடுகடத்தினர்.

          நெமேசியுஸ் கிறிஸ்தவர் என்பதற்காக கைது செய்யப்பட்டார். சாட்டையால் அடித்தார்கள். எட்டி உதைத்தார்கள். முகத்தில் துப்பினார்கள். கால்களை ஒடித்தனர். கொடூரமான துன்பங்களுக்கு மத்தியில் கிறிஸ்துவே உண்மையான உயிருள்ள கடவுள் என்று அறிக்கையிட்டார். அத்திரம் அடைந்த பேரரசன் நெமேசியுஸ் தலையை உயிருடன் எரித்துக் கொலை செய்தார்கள்.

No comments:

Post a Comment