Thursday 21 December 2017
புனித பேதுரு கனிசியுஸ்
நாட்டை சீர்திருத்த சிறந்த வழி உத்தம குருக்களை ஏராளமாக உருவாக்குவதே சிறந்தது என்று கூறியவர். தாயின் அன்பை அன்னை மரியாவிடமிருந்து பெற்றுக்கொண்டவர். கடவுளின் உதவியுடன் தனது ஒவ்வொரு செயலையும் செய்தவர். கிறிஸ்துவின் வழித்தடங்களில் நடந்து இறையாட்சிப் பணியை திறம்பட செய்தவரே புனித பேதுரு கனிசியுஸ். இவர் டச்சு நகரான நிஜ்மெகன் நகரில் 1521ஆம் ஆண்டு மே திங்கள் 8ஆம் நாள் பிறந்தார்.
கனிசியுஸ் தனது 19ஆம் வயதில் ஜெர்மன் நாட்டு கொலோன் பல்கலைக் கழகத்தில் சட்டவியலில் பட்டம் பெற்றார். இறைவன் இறையாட்சிப் பணிக்காக அழைப்பதை உணர்ந்த கனிசியுஸ் இயேசு சபையில் சேர்ந்து 1546ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்றார். 1547ஆம் ஆண்டு நடைபெற்ற திரெந்து பொது சங்கத்தில் பொறுப்பேற்றார். கல்லுரியில் ஆசிரியராக பணியாற்றினார். கல்வி கற்பிப்பதிலும், சிறந்த நூல்கள் எழுதுவதிலும், மறையுறை ஆற்றுவதிலும், திறமைமிக்கவராக காணப்பட்டார். திருமறைச்சுவடி என்னும் நூலை எழுதினார்.
அரசர் ஃபெர்டினான்டின் தலையீட்டினால் இறையியல் கற்பிக்க வியன்னா சென்றார். ஜெர்மனி நாடெங்கும் ஒரே குழப்பாக இருந்தது. மக்களுக்கு சிறந்த கல்விப் பயிற்சி அளித்து தீமைகள் எங்கும் பரவாமல் தடுத்தார். தப்பறைக் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், சிறுவர்களுக்கு ஆலோசனை வழங்கி வழிகாட்டினார். பல்வேறு இடங்களில் கல்லூரிகள் நிறுவினார். இறைவனில் வழியில் இறைமக்களை வழிநடத்த, நாட்டை சீர்திருத்த சிறந்த வழி உத்தம குருக்களை ஏராளமாக உருவாக்குவதே சிறந்தது என்றுகூறி குருத்துவ கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment