Friday 22 December 2017

புனித பிரான்செஸ் சேவியர் காப்ரினி


       “கீழ்ப்படிதல் மற்றும் ஒழுக்கமாக நடத்தல் வழியாக இறைவனை நெருங்கலாம்”  என்றுகூறி அவ்வாறே வாழ்ந்நவர். தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணித்தவர். “நம்பிக்கை உள்ளவர்களின் விசுவாசத்தை மீட்டெடுப்பதே எமது பணி” என்று கூறியவரே புனித பிரான்செஸ் சேவியர் காப்ரினி. இவர் இத்தாலி நாட்டில், லம்பார்டி பகுதியில் 1850ஆம் ஆண்டு ஜøலை திங்கள் 15ஆம் நாள் பிறந்தார்.

     “செபியுங்கள் எப்பொழுதும் செபியுங்கள்; செபவாழ்வு நடத்த கடவுளின் உதவியை இடைவிடாது கேளுங்கள். கடவுள் விரும்புவதை ஆர்வமாய் தேடுங்கள்” என்றுகூறிய அவ்வாறே வாழ்ந்தார். காப்ரினி குழந்தைப் பருவம் முதல் இறைபக்தியில் சிறந்து விளங்கினார். தாழ்ச்சி, கீழ்ப்படில், பொறுமை, ஒழுக்கம், ஏழ்மை, தூய்மை ஆகியவற்றைப் பின்பற்றி வாழ்ந்தார். நற்கருணை ஆண்டவரிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.

        வாழ்நாள் முழுவதும் இயேசுவுக்காக இறையாட்சி பணி செய்வேன் என்று தீர்மானித்தார். இறைநம்பிக்கை மிகுந்த வாழ்க்கை வழியாக கிறிஸ்துவுக்கு சான்று பகர்ந்தார். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தார்.  மறைப்பணியாளராகப் இறையாட்சி பணி செய்ய சீனாவுக்குச் செல்ல விரும்பினார். திருஇருதய சபை சகோதரிகள் துறவு இல்லத்தில் கன்னிமை வாழ்க்கை வாழ சென்றார். காப்ரினி உடல்மெலிந்து காணப்பட்டதால் துறவு கூடத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. பின் கடோனா இடத்திலுள்ள அனாதை குழந்தைகளைக் கவனித்து வந்தார்.

         1874ஆம் ஆண்டு நாசரேத்து சகோதரிகள் சேர்ந்து கற்பு, ஏழ்மை, கீழ்ப்படில் போன்ற வார்த்தைப்பாடு வழியாக இறைவனுக்கு தன்னை முற்றிலும் அர்ப்பணித்தார். இறையன்பிற்கும், பாசத்திற்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தார். 1880ஆம் ஆண்டு ஆயர் டொமினிகோ ஜெல்மினி என்பவரின் துணையுடன் திரு இருதய மறைபணியாளர்கள் சபையை ஆரம்பித்தார். 1888ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் திருத்தந்தையின் அனுமதி பெற்றார். திருதந்தை 13ஆம் சிங்கராயர் வேண்டுகோலுக்கு இணங்கி நியூôர்க் சென்று இறைபணி செய்தார்.

       குழந்தைகளை அன்புடன் கவனித்துக்கொண்டார். நம்பிக்கை வாழ்வில் நலியுற்றவர்களை ஊக்கப்படுத்தினார். பெற்றோர்களால் கைவிடப்பட்ட பிள்ளைகளை தாயன்புடன் வழிநடத்தினார். சிறந்த முறையில் கல்வி பணியாற்றினார். குழந்தைகளுக்கு அநாதை இல்லங்கள் ஆரம்பித்து அன்புடன் கவனித்தார். அனைவரின் ஆன்ம நலனுக்காக சிறப்பாக இறையாட்சி பணி செய்தார். இறைவனிடம் நம்பிக்கை கொள்ளுங்கள் நீங்கள் புதுமைகளைப் பார்ப்பீர்கள் என்று கூறிய காப்ரினி 1917ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 22ஆம் நாள் இறந்தார். திருதந்தை 12ஆம் பத்திநாதர் 1946ஆம் ஆண்டு ஜøலை 7ஆம் நாள் புனிதராக உயர்த்தினார்.

No comments:

Post a Comment