Sunday 10 December 2017

புனித யுலாலியா


      தனது உடல் பொருள் ஆவி அனைத்தும் கிறிஸ்துவுக்காக அர்ப்பணம் செய்தவர். உடலை மட்டும் கொல்லக்கூடிய மனிதர்களைப் பயப்படாமல் ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் தள்ளக்கூடிய இறைவனுக்கு அஞ்சி வாழ்ந்தவர். இடைவிடாமல் இறைபிரசன்னத்தில் வாழ்ந்தவர். தன்னை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து வாழ்ந்தவரே புனித யுலாலியா.

    யுலாலியா 304ஆம் வண்டு ஸ்பெயின் நாட்டில் பிறந்தார். சிறுவயது முதல் அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். தன் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அன்னை மரியாவின் துணை நாடினார். கிறிஸ்துவின்மீது கொண்ட அன்பினால் இறைவார்த்தையை வாழ்வாக்கி சான்று பகர்ந்தார். இத்தருணத்தில் டயோக்கிளேசியன் என்ற பேரரசர் கிறிஸ்தவ மக்களை கொடுமைப்படுத்தி துன்புறுத்தினான். கிறிஸ்துவின் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு அவரைப் பின்பற்றி, இறைவார்த்தையை வாழ்வாக்கி சான்று பகர்ந்த யுலாலியாவை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தினான். 

    பேரரசன் வணங்கும் கடவுளுக்குப் பலியிட்டு வணங்குமாறு யுலாலியாவை வற்புறுத்தி கட்டளையிட்டான். யுலாலியா, “நான் கிறிஸ்தவள். கிறிஸ்துவுக்காக என் வாழ்வை அர்ப்பணம் செய்துள்ளேன். நீ வழிபடும் கடவுளை வணங்கமாட்டேன்.  ஆண்டவராகியா இயேசு கிறிஸ்துவே உயிருள்ள ஒரே கடவுள் அவரை ஒருவரை மட்டுமே வணங்கி ஆராதிப்பேன். என் உடல்மீது உனக்கு அதிகாரம் இருக்கலாம். ஆனால் என் ஆன்மாவோ கடவுளுக்கு மட்டுமே சொந்தமானது” என்று கூறினார். கோபம் அடைந்த அரசன் யுலாலியாவை சந்தை கூடும் இடத்திற்கு இழுத்துச் சென்று தடியால் அடித்து நெருப்பிலிட்டு எரித்துக் கொலை செய்யுமாறு தீர்ப்பிட்டான். யுலாலியாவின் இறப்பைப் பார்த்த எண்ணற்ற மக்கள் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை வைத்தனர். 

No comments:

Post a Comment