Monday 4 December 2017

புனித யோவான் டமாசின்


           கிறிஸ்துவின் விழுமியங்களான அன்பு, அமைதி, பொறுமை, நேர்மை, உண்மை, நீதி, மன்னித்தல் போன்ற விழுமியங்களுக்கு சான்றாக வாழ்ந்தவர். செல்வச் செழிப்பில் வாழ்வதற்கான வசதிகளை துறந்து கிறிஸ்துவின் ஏழ்மையை தனதாக்கியவர். இஸ்லாமியா பெற்றோருக்கு பிறந்து கிறஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டவரே புனித யோவான் டமாசின். இவர் 650ஆம் ஆண்டு அராபியா நாட்டில் பிறந்தார்.

       இவரது தந்தை கருவூல அதிகாரியாக பணி செய்தார். கிறிஸ்தவ மக்களை அடிமை வாழ்விலிருந்தது விடுவித்தார். டமாசின் தந்தையின் வழிகாட்டுதலால் அறிவில் சிறந்து விளங்கினார். இசை, வானியல், இறையியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். தத்துவஞானி யூக்ளிட் என்பவருக்கு இணையான அளவுக்கு அறிவில் சிறந்து விளங்கினார். தந்தையின் மறைவுக்குப் பின் தமஸ்கு நகரின் தலைமை ஆலோசகராகப் பொறுப்பேற்றார்.


          மூன்றாம் சிங்கராயர் 726இல் திருவுருவ வழிபாட்டற்கும், பொது இடங்களில் திருவுருவங்களை நிறுவுவதற்கு தடைவித்தார். கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எதிராக பேசியவர்களை கண்டித்தார். அவற்றிற்கு எதிராக நூல்கள் வழியாக குரல் கொடுத்தார். இவரது செயலை விரும்பாத இஸ்லாமிய சமூகத்தின் தலைவர் காலிஃப் என்பவர் இவரது வலது கையை வெட்டினார். கரம் வெட்டப்பட்ட நிலையில் அன்னை மரியாவிடம் வேண்டுதல் செய்தார். புதுமையாக வெட்டுண்ட கை அவரது உடலுடன் இணைந்தது.
         யோவான் டமாசின் திருமுழுக்கு பெற்று ஆலோசகர் பதவியை துறந்து துறவு மேற்கொண்டார். பின் குருத்துவ பயிற்சி பெற்று குருவாக அருள்பொழிவு பெற்றார். தனது போதனையால், எழுத்தாற்றல் திறமையைப் பயன்படுத்தி கிறிஸ்துவின் அன்பை அறிவித்தார். இறைவனை அளவில்லாமல் அன்பு செய்த டமாசின் 749ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். 1883ஆம் ஆண்டு திருத்தந்தை 13ஆம் சிங்கராயர் திருச்சபையின் மறைவல்லுநராக அறிவித்தார்.

No comments:

Post a Comment