Sunday 24 December 2017

புனித யோவான் கந்ஷியஸ்


          தாழ்ச்சி, ஏழ்மையை பின்பற்றி கிறிஸ்துவின் உண்மை சீடராக வாழ்ந்வர். அன்பினால் அனைவருக்கும் பணிவிடைகள் செய்தார். இறைவனுக்கு தன்னை அர்ப்பணித்து நற்செயல்கள் வழியாக இறைவனை மாட்சிப்படுத்தினார். தன்னிடமிருந்த அனைத்து பொருட்களையும் ஏழை எளிய மக்களுக்கு பகர்ந்தளித்தார். சமூகத்தில் பின்தள்ளப்பட்ட மக்களை தேடிச் சென்று உதவி செய்தவரே புனித யோவான் கந்ஷியஸ்.
        யோவான் கந்ஷியஸ் போலந்து நாட்டில் க்ராக்கோ மறைமாவட்டத்தில் காண்டி என்னுமிடத்தில் 1390ஆம் ஆண்டு ஜøன் 23ஆம் நாள் பிறந்தார். இறைபக்தியில் சிறந்து விளங்கிய யோவான் கந்ஷியஸ் குருவாக இறையாட்சி பணி செய்ய விரும்பினார். பட்டங்கள் பல பெற்றார். இறையியல் கற்றுத்தேர்ந்து குருவாக அருள்பொழிவு பெற்றார். கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார்.
       ஓக்குஸ் பங்கு தந்தையாக நியமிக்கப்பட்டார். பங்குமக்களை ஆன்மீக வாழ்வுக்கு வழிகாட்டினார். துன்பத்தில் வாழ்ந்த மக்களை தேடிச் சென்று உதவினார். தன்னிடமிருந்த பொருட்களை இறைமக்களுக்கு பகர்ந்தளித்தார். அருட்சாதன வாழ்வில் ஆர்வமின்றி வாழ்ந்த மக்கள் இறையருள் பெற்றுக்கொள்ள தன்னொடுக்க முயற்சிகள் வழியாக அறிவு புகட்டினார். விவிலியத்தை இறைமக்களுக் விளக்கி கொடுப்பதில் மகிழ்ச்சி அடைந்தார். நிறைவாழ்வு தருகின்ற இறைவார்த்தையை வாழ்வாக்கி சான்று பகர்ந்தார். 
        மறைசாட்சியாக மாறிட ஆவல் கொண்டார். மறைசாட்சிகளின் அரசியான அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டு வாழ்ந்தார். அன்னையின் கரங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்து அன்பு, உண்மை, தாழ்ச்சி, பொறுமை இவற்றிற்கு சொந்தகாரகாக வாழ்ந்த யோவான் கந்ஷியஸ் 1473ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் இறந்தார். திருத்தந்தை 13ஆம் கிளமண்ட் 1767ஆம் ஆண்டு ஜøலை 16ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார். 

No comments:

Post a Comment