Wednesday 6 December 2017

புனித ஜெத்ரூத்

     
             உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காக இடைவிடாமல் இறைவனிடம் மன்றாடியவர். இறைவழிபாடு என்பது செபவாழ்வின் அடித்தளம் என்றுகூறி இடைவிடாமல் இறைவனை மாட்சிமைப் படுத்தியவர். 
கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பினால் துன்பங்களை மகிழ்வுடன் தாங்கிக்கொண்டவர். இவர் ஜெர்மனியில் 1256ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் நாள் பிறந்தார்.

             ஐந்து வயதுமுதல் துறவு இல்லத்தில் வாழ்ந்தார். சிறுவயது முதல் துறவு இல்லத்தின் ஒழுங்குமுறைகளை கடைப்பிடித்து வாழ்ந்தார். இலக்கியம், மெய்யியல் ஆகியவற்றை திறம்பட கற்றுத்தேர்ந்தார்.  இறைவனுக்கு தன்னை முற்றிலுமாக அர்ப்பணம் செய்து துறவற வாழ்வை தேர்ந்தெடுத்தார். இறையன்பு, இறைஞானம், சகோதர அன்பு, இறைபக்கி மற்றும் நற்பண்பு களில் நாளும் சிறந்து விளங்கினர். அன்னை மரியாவிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். 
           

            ஒவ்வொரு நிமிடமும் அன்னை மரியாவின் பாதுகாப்பும் அரவணைப்பும் பெற்று இறையுறவில் வளர்ந்து வந்தார். இறைவார்த்தையை நாளும் தியானித்தார். வார்த்தையான கிறிஸ்துவிடமிருந்து ஞானத்தை பெற்றுக்கொண்டார். ஒவ்வொரு நாளும் நற்கருணை முன்பாக பலமணிநேரம்  காத்திருந்தார். இவருடை சொற்களை கேட்போர் இறையன்பால் ஈர்க்கப்பட்டனர். ஏழை எளியவர், உயர்ந்தோர் தாழ்ந்தோர், படித்தவர் படிக்காதோர், பணக்காரர் பாமரர் என்ற வேறுபாடு இல்லால் அனைவரிடத்திலும் நட்புடன் பழகினார். 

         
ஒருமுறை இயேசு, ஜெத்ரூத்க்கு காட்சி அளித்து “இயேசு, மரியா, சூசை என்று ஒருமுறை செபிக்கின்றபோது உத்தரிக்கிற ஒரு ஆன்மா மீட்புபெறும்” என்று கூறினார். தனது வாழ்வின் பெரும் பகுதியை உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காக வேண்டுதல் செய்து நிலைவாழ்வு பெற்றுக்கொள்ள வழிகாட்டிவர். ஜெத்ரூத் 1302ஆம் ஆண்டு மண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து விண்ணக வாழ்வில் நுழைந்தார். இவர் பயணிகளின் பாதுகாவலர்.

No comments:

Post a Comment