இறைபணி செய்ய பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். ஒறுத்தல்கள் வழி இறைவனுக்கு உகந்தவாறு வாழ்ந்தார். கிறிஸ்துவின் 5 காயங்கள் தனது உடலில் ஏற்று கிறிஸ்துவின் துன்பத்தில் பங்கு சேர்ந்தார். இறைகாட்சிகள் காணும்வரம் பெற்றார். பாவிகள் மனந்திரும்ப நோன்பிருந்து ஒறுத்தல் செய்தார். குணமாக்கும் வரம் பெற்றபோது நோயாளிகளை குணமாக்கினார். நற்கருணை முன் கண்விழித்து செபித்தார்.
கிறிஸ்துவின் அன்பை பெற்றுக்கொள்ள நற்கருணை முன் செபித்தார். துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டார். பேராயர் மார் யோவான் மெனாகரி இவரின் அனுமதியும் ஆசீரும் பெற்று 1903ஆம் ஆண்டு தன்னுடன் மூன்று சகோதரிகளை இணைத்து பிரான்சிஸ்கன் சபைப் பிரிவில் சேர்ந்து துறவற இல்லம் ஆரம்பித்தார். 1914, மே 14ஆம் நாள் திருக்குடும்ப துறவு சபை தொடங்கிய தெரசியா 1926, ஜூன் 8ஆம் நாள் இறந்தார்.
No comments:
Post a Comment