Monday 7 June 2021

புனித மரியம் தெரசியா


  புனித மரியம் தெரசியா கேரளாவில் 1876, ஏப்ரல் 26ஆம் நாள் பிறந்தார். கிறிஸ்துவுக்கு தனது கற்பை அர்ப்பணித்தார். தாயன்பை அன்னை மரியாவிடம் பெற்றார். ஏழ்மையில் இறைவனின் கரம்பற்றி நடந்தார். கடவுளின் இரக்கத்தையும் அன்பையையும் தமது நற்செயல்கள் வழியாக வெளிப்படுத்தினார். எண்ணற்ற மக்கள் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொள்ள தனது வாழ்வை அர்ப்பணித்தார். நோன்பிருந்து இறைவனிடம் மன்றாடினார். சமூகத்தில் நன்மைகள் வழி ஏழைகளுக்கு உதவினார். தன்னுடன் 3 பெண்களை சேர்த்து அன்பு பணிகள் மூலம் நற்செய்தி அறிவித்தார். 

      இறைபணி செய்ய பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். ஒறுத்தல்கள் வழி இறைவனுக்கு உகந்தவாறு வாழ்ந்தார். கிறிஸ்துவின் 5 காயங்கள் தனது உடலில் ஏற்று கிறிஸ்துவின் துன்பத்தில் பங்கு சேர்ந்தார். இறைகாட்சிகள் காணும்வரம் பெற்றார். பாவிகள் மனந்திரும்ப நோன்பிருந்து ஒறுத்தல் செய்தார். குணமாக்கும் வரம் பெற்றபோது நோயாளிகளை குணமாக்கினார். நற்கருணை முன் கண்விழித்து செபித்தார். 

    கிறிஸ்துவின் அன்பை பெற்றுக்கொள்ள நற்கருணை முன் செபித்தார். துன்பங்களை துணிவுடன் ஏற்றுக்கொண்டார். பேராயர் மார் யோவான் மெனாகரி இவரின் அனுமதியும் ஆசீரும் பெற்று 1903ஆம் ஆண்டு தன்னுடன் மூன்று சகோதரிகளை இணைத்து பிரான்சிஸ்கன் சபைப் பிரிவில் சேர்ந்து துறவற இல்லம் ஆரம்பித்தார். 1914, மே 14ஆம் நாள் திருக்குடும்ப துறவு சபை தொடங்கிய தெரசியா 1926, ஜூன் 8ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment