Friday 25 June 2021

புனித வில்லியம்

 
    மோன்ட்ரே விர்ஜினே நகர் புனித வில்லியம் இத்தாலியில் 1085ஆம் ஆண்டு பிறந்தார். குழந்தைப் பருவத்தில் பெற்றோரை இழந்தார். தனது 15ஆம் வயதில் உலக இன்பங்களை துறந்து ஒறுத்தல்கள் செய்தார். கால்நடையாக புனித யாக்கோபின் திருத்தலத்திற்கு திருப்பயணம் மேற்கொண்டார். இறை தூண்டுதலால் இத்தாலியில் இறைபணி செய்ய இறைவல்லமையால் உந்துதல் பெற்றார். 
         

      விர்ஜினே பகுதியில் குடிசை அமைத்து தனிமையில் தன் ஆன்மீக வாழ்வை ஆரம்பித்தார். இறையனுபவம் மிகுந்த வில்லியம் அவர்களை மக்கள் சந்தித்து இறையன்பு,இறையாசீர், இறையமைதியை பெற்றனர். ஏழைகளின் நலன் கருதி நன்மைகள், புதுமைகள் செய்தார். பலரை தன்னுடன் இணைத்து துறவு மேற்கொண்டார். கடினமான தவ ஒறுத்தல்கள், இறைவேண்டல் வழியாக ஆன்மாக்கள் மீட்பு பெற அயராது உழைத்தார். சிசிலியில் முதலாம் ரோஜரின் உதவியுடன் ஆண்கள், பெண்கள் என்று துறவு இல்லங்கள் நிறுவினார். 1142இல் ஜூன் 25ஆம் நாள் இறந்தார். 

No comments:

Post a Comment