Sunday 6 June 2021

புனித நார்பர்ட்


    புனித நார்பர்ட் 1080ஆம் ஆண்டு அரச குடும்பத்தில் பிறந்தார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி அறிவிலும் ஞானத்திலும் வளர்ந்தார். துணை திருத்தொண்டராக ஸான்டனில் பணி செய்தார். ஃபிரடரிக் அரண்மனையில் எளிமையாக வாழ்ந்தார். ஒருமுறை குதிரையில் பயணம் செய்தார். தீடீரென இடி, மின்னல் ஏற்பட்டது. குதிரை நார்பர்டை கீழே தள்ளிவிட்டு ஓடியது. அயலானின் உதவியுடம் எழுந்து இறைவேண்டல் செய்து இறைவனின் திருவுளம் அறிந்தார். அரசவை வாழ்வை துறந்து ஒறுத்தல் செய்ய சீர்பெர்க் துறவுமட தலைவருடன் சேர்ந்தார். 35ஆம் வயதில் குருவானார். 

       கிறிஸ்து இயேசுவிடம் இணைந்து இறைபற்றுடன் வாழ தனது உடமைகளை ஏழைகளுக்கு கொடுத்தார். வெறுங்காலுடன் நடந்தார். பிச்சை எடுத்து உண்டார். லானில் வனப்பகுதியில் துறவு இல்லம் அமைத்து தவம் செய்தார். மக்கள் ஆன்மீக வாழ்வில் வளர அயராது உழைத்தார். தனது பணிகளை திருத்தந்தை இரண்டாம் ஜெலாசியுஸ் அவர்களிடம் எடுத்துரைத்து இறையாசி பெற்றார். லான் வனப்பகுதயில் துறவு இல்லம் அமைத்து ஒறுத்தல் செய்து இறைவனை மாட்சிப்படுத்தினார். 

        பண ஆசையும், தன்னலமும் துறந்து தூய உள்ளத்துடன் அன்பின் வழியில் கிறிஸ்துவின் விழுமியங்களுக்கு சான்று பகர்ந்தார். உரோமை சென்று வரும் வழியில் பார்வையற்ற பெண்ணுக்கு பார்வை அளித்தார். இறைவனின் திருவுளம் நிறைவேற்றிய நார்பட் ஆயரானார். திருச்சபை சொத்துக்களை அபகரித்தவர்களிடம் சொத்துக்களை திரும்ப கொடுக்க கூறினார். இறைவனோடு இணைந்து இறைமாட்சிக்காக பணி செய்த நார்பர்ட் 1134ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் நாள் இறந்தார்.

🌷🌷🌷🌷🌷

No comments:

Post a Comment