Saturday 26 June 2021

புனித ஜோஸ் மரியா எஸ்க்ரிவா தே பாலக்கர்

 

   

    புனித ஜோஸ் மரியா எஸ்க்ரிவா தே பாலக்கர் ஸ்பெயினில் 1902இல் ஜனவரி 9ஆம் நாள் பிறந்தார். கத்தோலிக்கப் பள்ளியில் பயின்று பக்தியில் வளர்ந்தார். சட்டம் பயின்று 1925ஆம் ஆண்டு குருவானார். மேய்ப்புப் பணியில் அதிதீவிரம் காட்டினார். ஏழைகள், குழந்தைகள், நோயாளிகளுக்கு உதவினார். உழைப்பின் மேன்மையை உணர்ந்து கடினமாக உழைத்தார். இறைவார்த்தையை தியானித்து இறையன்பை சுவைத்தார். 
   
 சமூகத்திற்கும் திருச்சபைக்கும் தனது வாழ்வை அர்ப்பணித்தார். இறைமக்கள் தூய்மையை பின்பற்ற வழிகாட்டினார். இறைப்பணி என்ற அமைப்பை உருவாக்கி இறையன்பு, சகோதர அன்பை எடுத்துரைத்தார். எதிர்ப்புகளை சந்தித்தபோது இறைவனின் துணைநாடி முன்னேறினார். தொழிற் பள்ளிகள், விவசாய பயிற்சிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றைத் தொடங்கி கிறிஸ்தவ விழுமியங்களுக்கு சான்றாக பணி செய்த மரியா 1975, ஜøன் 26ஆம் நாள் இறந்தார். 

No comments:

Post a Comment