ஒருமுறை நற்கருணைமுன் முழந்தாள்படியிட்டு செபித்துக் கொண்டிருந்தார். அவர் முன்பாக அலகை தோன்றி அவரைச் சோதிக்க முயன்றது. கலக்கம் ஏற்பட்டாலும் முழந்தாள்படியிட்டிருந்த சலவைக் கல்லில் பக்தியுடன் சிலுவை அடையாளம் வரைந்தார். அந்தச் சிலுவை அடையாளம் சலவைக் கல்லில் அப்படியே பதிந்துவிட்டது. இதைப் பார்த்ததும் அலகை அலறி அடித்துக்கொண்டு ஓடியது. அந்த சலவைக் கல் சிலுவை அடையாளத்துடன் இன்றும் காணப்படுகிறது. இவ்வாறு சிலுவையின் மகத்துவத்தைத் தமது பன்னிரெண்டாம் வயதில் உணர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சி வழியாகக் குருவானவராகப் பணியாற்ற விரும்பினார்.
தூய அகுஸ்தினார் குருமடத்தில் சேர்ந்து 1219ஆம் ஆண்டு குருவானார். 1220ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் துறவு சபையில் சேர்ந்தார். அசிசியாரின் தாழ்ச்சி, ஏழ்மை, ஆன்மதாகம், கீழ்ப்படிதலைப் பின்பற்றினார். இதயத்தில் தாழ்ச்சிக்கு இடமளித்து இறையருள் பெற்று இறைமக்களின் நலன் முன்னிட்டு புதுமைகள் செய்தார். திருச்சபையின் மறைவல்லுநர்; திருமறையைப் பாதுகாத்து நற்செய்தியை சொல்லாலும்; செயலாலும்; வாழ்வாலும் அறிவித்து 1231ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் நாள் இறந்தார்.
No comments:
Post a Comment