Wednesday 9 June 2021

புனித எஃப்ரேம்

        


புனித எஃப்ரேம் சிரியா நிசிபிஸ் நகரில் 306ஆம் ஆண்டு பிறந்தார். நிசிபிஸ் நகர ஆயரிடம் கல்வி கற்று நற்பண்பில் வளர்ந்தார். இளம்பருவத்தில் திருமுழுக்குப் பெற்று திருத்தொண்டரானார். கிறிஸ்தவர்களுக்கு ஆதராவு அளித்த உரோமை பேரரசர் முதலாம் கான்ஸ்டன் மறைவுக்குப் பின் பெர்சிய அரசன் இரண்டாம் ஷாபர் நிசிபிஸ் நகரை முற்றுகையிட்டபோது எஃப்ரேம் இறைவேண்டல் வழி ஆயரை காப்பாற்றினார். 

      எஃப்ரேம் இறைவன் செய்த புதுமைகளுக்கு பாடல்கள் மூலம் நன்றி கூறினார். 364இல் நாட்டை விட்டு வெறியேறி 364இல் எதேசா மலைக்கு சென்றார். 372 எதேசாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டபோது பசியால் வாடியவர்களுக்கு பிச்சை எடுத்து அவர்களின் பசி போக்கினார். தப்பரைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். மரியாவின் அன்பு மகனாக வாழ்ந்தார். புகழ்மிக்க ஆசிரியர், கவிஞர், மறையுரையாளர், நம்பிக்கையின் காவலர், தூய ஆவியின் புல்லாங்குழல் என்று அழைக்கப்பட்ட எஃப்ரேம் 373, ஜூன் 9ஆம் நாள் இறந்தார்.

                                                 🌷🌷🌷🌷🌷🌷🌷

No comments:

Post a Comment