Saturday 5 June 2021

புனித போனிஃபஸ்

 

       புனித போனிஃபஸ் கிரெட்டன் நகரில் சமூகத்தில் மதிப்பும் செல்வாக்கும் பெற்ற குடும்பத்தில் பிறந்தார். அறிவிலும் ஞானத்திலும் நல்லொழுக்கத்திலும் வளர்ந்தார். வசதியாக வாழ்ந்தபோது நிலையான இறைவனை தனதாக்க துறவு மேற்கொள்ள விரும்பினார். மிகுந்த போராட்டத்திற்கு பிறகு தந்தையின் அனுமதி பெற்று ஆசிர்வாதப்பர் துறவு மடத்தில் சேர்ந்து 30ஆம் வயதில் குருவானார். 

    திருத்தந்தையின் அழைப்பு பெற்று துரிங்கியர் மத்தியில் பணியாற்றினார். பின் பிரிசியரில் வில்லி பிரார்ட்டுடன் இணைந்து எண்ணற்றோரை திருமறையில் சேர்த்தார். போனிஃபஸின் கடின உழைப்பும், அதன் பயனையும் அறிந்த திருத்தந்தை உரோமைக்கு அழைத்து 722ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் ஆயராக அருள்பொழிவு செய்து ஜெர்மனியில் மறைபணி செய்யும் பொறுப்பை ஒப்படைத்தார். 

    737இல் ஆஸ்திரேலிய நாட்டு பிரதிநிதியானார். இறைவார்த்தையை வாழ்வாக்கி ஏழைகளின் உரிமைக்கு குரல் கொடுத்தார். 753ஆம் ஆண்டு யூடிரெச்ட் பகுதியில் ஏராளமானோருக்கு திருமுழுக்கு கொடுத்தார். இதனால் உள்ளூர் மதவாதிகள் தங்கள் மதம் அழிந்துவிடுமோ என்று அஞ்சி, தூயவரும் அன்பருமான போனிஃபஸ் மற்றும் அவருடன் 52 பேரையும் தலையை வெட்டி கொலை செய்தனர்.

No comments:

Post a Comment