Wednesday 23 June 2021

புனித ஜோசப் கஃபாசோ

    

    புனித ஜோசப் கஃபாசோ இத்தாலியில் 1811ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் நாள் பிறந்தார். பிறவிலேயே முதுகுத்தண்டு பிரச்சனையோடு பிறந்தார். அன்னை மரியாவிடம் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். ஒறுத்தல் முயற்சிகள் வழியாக இறையாசீர் பெற்றார். தவறாமல் திருப்பலியில் பங்கேற்று பலிபீடத்தில் உதவினார். ஏழை குழந்தைகளுக்கு மறைக்கல்வி கற்றுக்கொடுத்தார். ஒழுக்கமுள்ளவராகவும் தூயவராகவும் வாழ்ந்த ஜோசப் 22ஆம் வயதில் குருவானார். 

    தூரின் நகரில் குருமடத்தில் அறநெறி ஆசிரியராகவும் அதிபராகவும் பணி செய்தார். நற்கருணை பக்திக்கு முதலிடம் கொடுத்தார். ஒப்புரவு அருட்சாதனம் வழி இறை மன்னிப்பை மக்களுக்கு அனுபவமாக்கினார். ஆன்ம ஆலோசகராகவும் சமூக நலனில் அக்கறை உள்ளவராகவும் இருந்தார். ஏழைகள் ஆதரவற்றோருக்கு ஆதரவு அளித்தார். தானம், தவம், ஒறுத்தல் வழி இறைவனை மாட்சிப்படுத்திய ஜோசப் 1860ஆம் ஆண்டு ஜøன் 23ஆம் நாள் இறந்தார்.  

No comments:

Post a Comment