Thursday 17 June 2021

புனித கிரகோரி பார்பரீகோ

  

    புனித கிரகோரி பார்பரீகோ இத்தாலியில் 1625ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் நாள் பிறந்தார். திருச்சபை சட்டம், உள்நாட்டு சட்டம் ஆகியவற்றில் முனைவர் பட்டம் பெற்றார். 1655ஆம் ஆண்டு குருவானார். இரக்கச் செயல்கள் வழி இறையன்பை வெளிப்படுத்தினார். 1656ஆம் ஆண்டு உரோமையில் பிளேக் நோய் பாதித்த நோயாளின் ஆன்மீகம், பொருளாதார தேவைகளை நிறைவேற்றினார். 

    1657 இல் ஜூலை 9 ஆம் நாள் பெர்காமோ மறைமாவட்டவத்தின் ஆயரானார். 1660ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் நாள் கர்தினாலானார். நூலகங்கள் நிறுவி கல்வி பணிக்கு முன்னுரிமை கொடுத்தார். திருதெந்து பொதுச்சங்கத்தின் முடிவுகளை நிறைவேற்றினார். கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். மேய்ப்புப்பணி சந்திப்பு மையங்கள் தொடங்கினார். இறைபணிகளை ஆர்வமுடன் செய்த கிரகோரி 1697ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment