Monday 7 June 2021

🌷புனித தாமஸ் ஏ கெம்பிஸ்🌷

         புனித தாமஸ் ஏ கெம்பிஸ் ஜெர்மனியில் 1379ஆம் ஆண்டு பிறந்தார். 13ஆம் வயதில் பொதுவாழ்வு சகேதரர்களின் அமைப்பில் சேர்ந்து அறிவிலும் ஞானத்திலும் வளர்ந்தார். 19ஆம் வயதில் புனித அகுஸ்தினார் துறவு மடத்தில் சேர்ந்து 1413இல் குருவானார். 

     சில ஆண்டுகளில் மடத்தின் துணைத்தலைவரானார். பதவிகள் தன்னை தேடி வந்தபோது பணிவுடன் மறுத்தார். துறவு இல்லத்திலிருந்து வெளியேறாமல் 70 ஆண்டுகள் இறைவனோடு ஒன்றிணைந்து இறைபிரசன்னத்தில் வாழ்ந்தார். எழுத்துப்பணிகள் வழியாக இறைமாண்பை எடுத்துதுரைத்தார். 

    தனது இறையனுபவங்களை, இறைவனின் கருணையை நூல்கள் வழியாக வெளிப்படுத்தினார். இறையியல் நிறைந்த போதனைகள், கட்டுரைகள், காலத்திற்கும் அழியாத புகழ் பெற்ற கிறிஸ்து நாதர் அனுசாரம் என்ற நூல் எழுதினார். துறவிகளிடத்தில் அன்பு கொண்டு வாழ்ந்த தாமஸ்1471ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் நாள் இறந்தார்.

                                                                    🌷🌷🌷🌷🌷🌷🌷

No comments:

Post a Comment