Thursday 10 June 2021

புனித கெட்டூலியஸ்

    


    புனித கெட்டூலியஸ் இத்தாலியில் பிறந்தார். டிராஜன் பேரரசன் ஆட்சியில் கெட்டூலியஸ் அதிகாரியாக பணி செய்தார். கிறிஸ்துவை அரசராகவும் அன்பராகவும் நண்பராகவும் ஏற்று திருமுழுக்குப் பெற்றார். தனது அதிகாரப் பெறுப்பை துறந்து இல்லம் சென்றார். இதையறிந்த டிராஜன் கெட்டூலியûஸ கைது செய்ய வீரர்களை அனுப்பினான். 

    தன்னை கைது செய்ய வந்த வீரர்களிடம் கிறிஸ்துவின் அன்பு, நம்மை மீட்க அவர் ஏற்ற துன்பங்களை எடுத்துரைத்தபோது வீரரர்கள் மனம்மாறி திருமுழுக்கு பெற்றனர். பேரரசன் கிறிஸ்தவர்களை ஏற்றுக்கொண்ட வீரர்களை கிறிஸ்துவை மறுதலிக்க கூறினான். இதைமறுத்த கெட்டூலியஸ் மற்றும் வீரர்களை 27 நாட்கள் சிறைவைத்து துன்புறுத்தி நெருப்பில் தூக்கிப்பேட்டபோது தீ அவர்களை ஒன்றும் செய்யவில்லை. 120இல் கெட்டூலியஸ் சிம்ஃபோரோசா தம்பதியரின் 7 மகன்களும் வீரர்களின் தலையையும் துண்டித்தான்.

 

No comments:

Post a Comment