Monday 14 June 2021

புனித மெத்தோடியஸ்

    


       புனித மெத்தோடியஸ் 788இல் சிசிலியில் பிறந்தார். கல்வி அறிவில் வளர்ந்தபோது வேலை வாய்ப்புகள் தேடிவந்தன. ஆடம்பர வாழ்வை துறந்து பித்தினியாவில் துறவு மடத்தில் சேர்ந்தார். இறையனுபவம் பெற்று இறைதிட்டம் நிறைவேற்றினார். அர்மீனியனான 5ஆம் லியோ அரசன் சுரூப வழிபாட்டில் ஈடுபடும் கிறிஸ்தவர்களை கென்றான்.

     மெத்தோடியஸ் திருத்தந்தை முதலாம் பாஸ்காவை சந்தித்து இந்நிலையை எடுத்துரைத்து தன்னால் இயன்றவரை முயற்சி செய்தார். மிக்கேல் அரசர் ஆட்சி செய்த சிலநாட்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக செயல்பட்டார். மெத்தோடியûஸ கைது செய்து அக்ரிதா தீவில் சிறையில் வைத்தான். 3ஆம் மிக்கேலின் தாயின் ஆட்சியில் மெத்தோடியஸ் விடுதலையானார். 842 இல் மெத்தோடியஸ் தலைமையில் ஆயர் மன்றம்கூடி சுரூப வழிபாட்டை அங்கீகத்தது. மெத்தோடியஸ் 847, ஜூன் 14ஆம் நாள் இறந்தார்.  

No comments:

Post a Comment