Friday 11 June 2021

புனித பர்னபா

 

    புனித பர்னபா இளமையில் கிறிஸ்துவரானார். தனது நிலத்தை ஏழைகளுக்கு பகர்ந்தளித்தார். தூய ஆவியால் நிறைந்து நம்பிக்கை வாழ்வில் வளர்ச்சி அடைந்தார். பவுல் மனம் மாறியவுடன் பர்னபாதான் அவரை எருசலேமில் இருந்த திருத்தூதர்களிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்தார். அந்தியோக் நகரில் திருத்தூது பணியால் மனம்மாறி கிறிஸ்தவர்களை நம்பிக்கை வாழ்வில் நிலைத்திருக்க உறுதிப்படுத்தினார். 

    லிஸ்திராவில் ஊனமுள்ள ஒருவரை நடக்க செய்தார். நற்செய்தியாளர் மாற்கு, பவுல், பர்னபா மூவரும் இணைந்து சைப்பிரஸில் போதித்தனர். எருசலேமில் நடந்த முதல் பொதுச்சங்கத்தில் பங்கேற்றார். பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராக இல்லாதபோதும் பவுலைப் போலவே பர்னபாவும் திருத்தூதர் என்றே அறியப்படுகிறார். சைப்பிரஸில் நற்செய்தி அறிவித்தபோது கல்லால் எறியப்பட்டு 64ஆம் ஆண்டு இறந்தார்

No comments:

Post a Comment