Tuesday 15 June 2021

புனித ஜெர்மேன் குசேன் பிப்ராக்

 


புனித ஜெர்மேன் பிரான்ஸில் 1579ஆம் ஆண்டு பிறந்தார். கழுத்து, தாடை காசநோய்க் கட்டியால் துன்புற்றார். தாயை இழந்தபோது தந்தை மறுமணம் செய்தார். சிற்றன்னை,  ஜெர்மேனின் நோய் தன்னை பாதிக்கும் என்று பயந்து வீட்டிலிருந்து வெளியேற்றினார். ஜெர்மேன் மாட்டுத்தொழுவத்தில் இலை சருகுகளை மெத்தையாக்கி உறங்கினார். காய்ந்த ரொட்டித் துண்டுகள் உண்டு அமைதியாக வாழ்ந்தார்.

     திருப்பலியில் தவறாமல் பங்கேற்றார். மறைக்கல்வி, கத்தோலிக்க விசுவாசம் பயின்றார். ஆடுகள் மேய்கும்போது செபமாலை செபித்தார். உடல்நோய், ஆதரவற்ற நிலையை தன்னொடுக்க தவமுயற்சி வழி ஆசீர்வாதமாக மாற்றினார். நற்கருணைமீதும் அன்னை  மரியாவின்மீதும் ஈடு இணையற்ற அன்பும், பக்தியும் கொண்டிருந்தார். எளிமையிலும், இகழ்ச்சியிலும், வறுமையிலும் இறைகரம் பற்றி வாழ்ந்த ஜொóமேன் 1061ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 15ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment