Friday 4 June 2021

புனித பிரான்சிஸ் கராச்சியோலா


       புனித பிரான்சிஸ் கராச்சியோலா இத்தாலி நாட்டில் 1563ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் நாள் பிறந்தார். அன்பும் நேர்மையும் ஒழுக்கமும் மிகுந்தவராக வளர்ந்தார். 22ஆம் வயதில் தொழுநோய் பாதித்தபோது இறைவேண்டல் வழியாக நலமடைந்தார். தனது சொத்துக்களை விற்று ஏழைகளுக்கு கொடுத்தார். 1587ஆம் ஆண்டு குருவானார். 

 தண்டனை கைதிகள் மத்தியில் நற்செய்தி அறிவித்தார். கைதிகள் மனந்திரும்பி கிறிஸ்துவை அரசராகவும் மீட்பராகவும் ஏற்றனர். ஏழைகளையும் ஆதரவற்றோரையும் அதிகம் அன்பு செய்தார். புதிய சபையை உருவாக்கினார். பதவிகளை விரும்பாமல் பணிவுடன் தன்னொடுக்க முயற்சிகள் மேற்கொண்டார். 24 மணிநேர நற்கருணை ஆராதனையில் மக்களை பங்கேற்க செய்தார். 
    
    ஆயர் பதவியும், சபையின் தலைமை பொறுப்பும் தன்னிடம் வந்தபோது தாழ்ச்சியுடன் துறந்தார். காட்சி தியானம் வழியாக இறையனுபவம் பெற்று சபை  உறுப்பினர்களை இறைவழி நடத்தினார். எல்லா பிரச்சனைகளையும்  நற்கருணை ஆண்டவரிடம் அர்ப்பணித்து இறையருள் பெற்று முன்னேறினார். அன்னை மரியாவின் அன்பும் அருளும் அரவணைப்பும் செபமாலை வழியாக பெற்றுக்கொண்ட பிரான்சிஸ் 1608ஆம் ஆண்டு இறந்தார்.  

No comments:

Post a Comment