Saturday 19 June 2021

புனித ரோமுவால்ட்

         


         புனித ரோமுவால்ட் இத்தாலி நாட்டில் 950ஆம் ஆண்டு செல்வந்தக் குடும்பத்தில் பிறந்து ஆடம்பரமாக வாழ்ந்தார். தனது தந்தையின் தவறுகளுக்கு பரிகாரம் செய்தார். புனித ஆசிர்வாதப்பர் துறவு இல்லத்தில் சேர்ந்தார். கடுமையான விதிமுறைகள் பின்பற்றி தன்னை நெறிப்படுத்தினார். கடுந்தவத்துடன் கூடிய செப வாழ்வுக்கு தன்னை அர்ப்பணித்தார். தவமேற்கொண்ட ரோமுவால்ட், மரினுஸ் இருவரும் இணைந்து புதிய துறவு இல்லம் நிறுவினர். 

           இத்தாலி முழுவதும் சுற்றித் திரிந்து நற்செய்தி போதித்து பல்வேறு துறவு இல்லங்கள் நிறுவினார். சென்ற இடமெல்லாம் துறவு இல்லம் நிறுவினார். இறைவார்த்தை வாழ்வாக்கி ஆன்மாவின் உணவாகவும், வாழ்வின் சட்டமாக கொண்டு பயணித்தார். இறைவேண்டலில் நிலைத்திருந்து இடைவிடாமல் இறைவனுக்கு நன்றிகூறி இறையாட்சி பணி செய்த ரோமுவால்ட் 1072ஆம் ஆண்டு ஜøன் 19ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment