Sunday 27 June 2021

அலெக்ஸாந்திரியா நகர் புனித சிரில்


        அலெக்ஸாந்திரியா நகர் புனித சிரில் 376ஆம் ஆண்டு எகிப்தில் பிறந்தார். இறைபக்தியில் வளர்ந்து இறைஞானம் மிகுந்தவரானார். இறையியல் கற்று குருவாக அருள்பொழிவு பெற்றார். இறைவனோடு இணைந்து திருச்சபையை அன்பு செய்தார். தியோஃபிலஸ் 412இல் இறந்தபோது சிரில் மறைத்தந்தையானார். நெஸ்தோரியனிசம் தப்பறைக்கு எதிராக குரல் கொடுத்தார். 


   கிறிஸ்தவர்களை துன்பங்களிலிருந்து விடுவித்தார். தன்மீது குற்றம் சுமத்தியவர்களை மன்னித்து அன்பு செய்தார். அன்னை மரியாவிடம் மிகுந்த அன்பும் பக்தியும் பற்றும் கொண்டார். “வெவ்வேறான மெழுகுத் துண்டுகள் இரண்டை எடுத்து ஒட்ட வைக்கும்போது ஒன்றாகி விடுகிறதன்றோ? அவ்வாறே நற்கருணை விருந்தில் பங்கேற்கும் ஒருவர் கிறிஸ்துவுடன் ஒன்றாகிறார். கிறிஸ்து அவருடனும், அவர் கிறிஸ்துவடனும் இணைந்து விடுகின்றார்” என்றுகூறிய சிரில் 444, ஜூன் 27ஆம் நாள் இறந்தார்.


No comments:

Post a Comment