Wednesday 16 June 2021

புனித யோவான் பிரான்சிஸ் ரெஜிஸ்

  


    புனித யோவான் பிரான்சிஸ் ரெஜிஸ் பிரான்ஸில் 1597 இல் ஜனவரி 31ஆம் நாள் பிறந்தார். 1616ஆம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்தார். திருச்சபையின் நம்பிக்கையின் போதனைகளை கற்பிக்கவும், ஆன்மாக்களை மீட்கவும் அயராது உழைத்தார். 1630ஆம் ஆண்டு குருவாகி இறையாட்சி பணியை ஆரம்பித்தார். தூலூஸ் நகரம் பிளேக் நோய் பரவியபோது மக்களை காப்பாற்ற உழைத்தார். 

 மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து ஆறுதல்கூறி செபித்தார். இரக்கச் செயல்கள் வழி மக்களின் தேவைகளை நிறைவேற்றினார். வசதியானவர்களிடம் உதவி பெற்று ஏழைகளின் துயர் போக்கினார். பாலியல் தொழில் வழி நிம்மதியை இழந்தவர்களின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்தார். 50க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நற்செய்தி அறிவித்து பலரை மனம்மாறினர். பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் நற்செய்தி அறிவித்த யோவான் 1640ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment