Monday 28 June 2021

புனித ஐரனியஸ்

 

      புனித ஐரனியஸ் இரண்டாம் நூற்றாண்டின் முதல் பாதியில் பிறந்தார். கத்தோலிக்க இறையியலார்களின் தந்தை என்றழைக்கப்படுகிறார். உரோமைப் பேரரசரான மால்குஸ் அவுரேலியுஸ் கிறிஸ்தவர்களை கொலை செய்த காலத்தில் லுக்குனம் பகுதியில் குருவாக பணி செய்தார். மறைக்கலகத்தின் போது கிறிஸ்தவ நம்பிக்கையை புறக்கணிக்காத அருள்பணியாளர்கள் சிறையில் அடைக்கப்பட்ட குருக்களின் நிலையை உரோமை சென்று திருத்தந்தையிடம் எடுத்துரைத்தார்.  

     ஐரனியஸ்  லுக்குனம் பகுதிக்கு திரும்பியதும் ஆயரானார். 24 ஆண்டுகள் அமைதியுடன் ஆயராக இறைபணி செய்தார். சிந்தனைத்துவக் கருத்துக்கள், தப்பறைகள் ஆகியவற்றிற்கு எதிராக நூல்கள் எழுதினார். புதிய ஏற்பாட்டின் அதிகாரப்பூர்வ பதிப்புகள் உருவாக வழி செய்த ஐரனியஸ் மறைசாட்சியாக இறந்தார்.        

No comments:

Post a Comment