Saturday 12 June 2021

ஸகாகுன்நகர் புனித யோவான்


     ஸகாகுன் நகர் புனித யோவான் ஸ்பெயினில் 1419ஆம் ஆண்டு பிறந்தார். புனித ஆசிர்வாதப்பர் துறவு மடத்தில் தொடக்கக்கல்வி கற்று இறையன்பில் வளர்ந்தார். பர்கோஸ் நகர் ஆயரின் கண்காணிப்பில் உயர்கல்வி கற்று இறையாட்சி பணியில் ஆர்வம் கொண்டார். சலமான்கா பல்கலைக்கழகத்தில் 4 ஆண்டுகள் இறையியல் பயின்றார். உலக இன்பங்களை துறந்து 1445 இல் குருவானார். 

கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு நற்செய்தியை அறிவித்து ஆன்மாக்களை மீட்டார். ஒறுத்தல், தன்னொடுக்கம், ஏழ்மையை கடைப்பிடித்து ஏழைகளுக்கு பணி செய்தார். நோயாளிகளை சந்தித்து ஆறுதல்கூறி நலமாக்கினார். 1464இல் புனித அகுஸ்தினாரின் துறவு மடத்தில் துறவியாக வாழ்ந்தார். அயலானின் உள்ளுணர்வுகளை அறிந்த நற்செய்தி வழி பாவிகளை மனந்திரும்பினார். சமூகத்தில் மக்களை துன்புறுத்தியவர்களை கண்டித்தபோது பொறாமை கொண்ட சமூக விரோதிகள் உணவில் விஷம் கலந்து கொடுத்தபோது 1479ஆம் ஆண்டு இறந்தார்.

No comments:

Post a Comment