Monday 5 November 2018

புனித சார்லஸ் பொரோமியோ

 
“என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். இறைவனுக்கு உகந்ததையே செய்வேன்” என்றுகூறிய நம்பிக்கை வீரர்.
 இறையன்பின் சுடராக உண்மையான சமூக சீர்திருத்தவாதியாக செயல்பட்டவர். இறைவனிடம் மிகுந்த தோழமை கொண்டவர். கிறிஸ்துவுக்காகவும் திருச்சபைக்காகவும் தனது சொத்து, சுதந்திரம் அனைத்தையும் துறந்தவரே புனித சார்லஸ் பெரோமியோ. இவர் 1538ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 3ஆம் நாள் பிறந்தார்.
     
   தனது செல்வத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்து கொடுப்பதில் ஆனந்தம் அடைந்தார். பன்னிரண்டாம் வயதில் துறவியாகும் விருப்பத்துடன் உச்சந்தலையில் வட்டம் போட்டுத் தன்னை கிறிஸ்துவுக்கு அர்ப்பணமாக்கினார். இவரது தந்தையும் சகோதரனும் திடீரென்று மரணமடைந்தனர். சார்லஸ் குடும்பத்தின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு உறவினர்கள்  வற்புறுத்தினர். அவரோ,“நான் குருவானவராக பணிசெய்ய விரும்புகிறேன்” என்றார். 1563, செப்டம்பர் 4ஆம் நாள் குருவாக அருட்பொழிவு பெற்றார்.

       சார்லஸ் தனது முதல் நன்றி திருப்பயை அன்னை மரியாவின் விண்ணேற்புத் திருநாளன்று புனித பேதுரு, புனித பவுல் இவர்களின் கல்லறையில் நிறைவேற்றினார். தனது பணியையும், சேவையையும் வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கும், ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்கும் பணியாற்றிட அன்னை மரியிடம் வேண்டுதல் செய்தார்.  தனது சேவையின் முதல் கட்டமாக திருத்தெந்து பொதுச்சங்கம் நடத்திய திருத்தந்தைக்கு உதவி செய்ய சார்லஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சார்லஸ் 1563 ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் புனித அம்புறோஸ் திருநாள் அன்று மிலான் பேராயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

     உயிருள்ள, ஆற்றல், வல்லமை தருகின்ற இறைவார்த்தையை எங்கும் போதித்தார். இவரது போதனையைக் கேட்டவர்கள் மனம்மாறி நன்மை பல செய்தார்கள். தமது வாழ்நாள் முழுவதும் நற்கருணை நாதருக்காகவும், திருச்சபைக்காகவும், ஏழை மக்களுக்காகவும் வாழ்ந்த சார்லஸ் 1560ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் நாள் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். சார்லஸ் 1584, நவம்பர் 3ஆம் நாள் இயற்கை எய்தினார். இவரை திருத்தந்தை ஐந்தாம் பவுல் 1610, நவம்பர் முதல் தேதி புனிதர் நிலைக்கு உயர்த்தினார். இவர் குடல் கோளாறுகள்; ஆன்மீகத் தலைவர்களின் பாதுகாவலர்

No comments:

Post a Comment