Monday 5 November 2018

புனித பெர்டில்லா

         
       நமது வேளை உண்மையான பலன் கொடுக்க வேண்டுமானால் நம்மிடம் தாழ்ச்சி இருக்க வேண்டும் என்றுகூறி தாழ்ச்சியுடன் வாழ்ந்தவர். அந்நியர்களை உபசரித்து, நோயளிகளையும், சிறார்களையும் அன்புடன் பராமரித்தவர். அன்பு, கனிவு, இரக்கம், தாழ்ச்சி, தூய்மை மற்றும் இறைஞானம் ஆகியவற்றை பிரதிபலித்தவரே புனித பெர்டில்லா. 
இவர் பிரான்ஸ் நாட்டில் சொய்சன்ஸ் என்னும் இடத்தில் ஏழாம் நூற்றாண்டில் பிறந்தார்.

        குழந்தைப்பருவம் முதல் இறையன்பில் வளர்ந்த பெர்டில்லா தனது வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணிக்க தூய ஆவியின் தூண்டுதல் பெற்றார். ஆன்ம குருவின் வழிகாட்டுதலால் புனித கொலும்பனுடைய விதிமுறைகளைப் பின்பற்றிய துறவு மடத்தில் சேர்ந்தார். இறைவனின் உடனிருப்பை உணர்ந்து அவரது பிரசன்னத்தில் வாழ்ந்தார். கிறிஸ்துவின் விழுமியங்களை நற்செயல்கள் வழியாக வெளிப்படுத்தினார். உடன் வாழ்ந்தக் கன்னியர்களுக்கு முன்மாதியாக வாழ்ந்தார். 

           ஒவ்வொரு நாளும், “ஆண்டவராகிய இயேசுவே! என்மீது இரக்கமாயிரும்” என்று செபித்து இறைவனின் ஆசியுடன் துவங்கினார். தனது செபத்தின் வழியாக எண்ணற்ற மக்களை கிறிஸ்துவோடு இணைத்தார். செப தவ வாழ்வினால் துறவிகளுக்கு முன்மாதிரியாக மாறினார். இவரது வழிகாட்டுதலால் துறவிகள் புனிதமான வாழ்கை வாழ்ந்தனர். பிரான்ஸ் அரசர் குளோவிஸ் இறந்தவுடன் இவரின் வழிகாட்டுதலால் அரசி பத்தில்டிஸ் துறவியானார். செபத்தின் வழியாக இறை மனித உறவில் வாழ்ந்த பெர்டில்லா 692ஆம் ஆண்டு மண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து இயற்கை எய்தினார்.

No comments:

Post a Comment