Tuesday 6 November 2018

அன்னை மரியா

       அன்னை மரியா மாசணுகாதவர்; அன்பின் உறைவிடம்; தாழ்ச்சியின் சிகரம்; விண்ணகத்தின் வாசல்; விண்ணக மண்ணக அரசி; அமல உற்பவி; இறைவனின் தாய்; விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்டவர்; உடன்படிக்கையின் பேழை எனப்பலவாறு அழைக்கிப்படுகின்றார். புனித அல்போன்ஸ் லிகோரி மரியாவிடம் அன்புகொண்டிருந்தார். ஒருநாள் மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு செபித்துக் கொண்டிருந்தார். அப்போது கட்டிடம் அதிர்வதைப்போல் உணர்ந்தார். “உலக வாழ்க்கையை விட்டு உனது வாழ்க்கையை இறைவனுக்கு அர்ப்பணமாக்கு” என்ற குரல் கேட்டார். அல்போன்ஸ் மரிய லிகோரி உடனே அருகிலிருந்த மீட்பின் அன்னை ஆலயம் சென்று அன்னையின் திருசொரூபம் முன்பாக முழந்தாளிட்டு, “அன்னை மரியே நான் எனது உடமைகளையும் பதவியையும் இழக்க விரும்புகின்றேன். உலக இன்பங்களும் அதன்மூலம் கிடைக்கின்ற இன்பத்தை இயேசுவுக்காக இழக்கின்றேன். வாழ்நாள் முழுவதும் புனிதம் மிகுந்த குருவாக பணிசெய்ய என் கரம் பிடித்து வழிநடத்தும்” என்று செபித்தார். அன்னை மரியின் துணையோடு வழக்குரைஞர் பணியைத் துறந்து இறையாட்சி பணிக்காக தன்னை அர்ப்பணம் செய்து புனிதராக மாறினார்.

No comments:

Post a Comment