Friday 16 November 2018

புனித அடிலெய்ட்

கிறிஸ்துவின் விழுமியங்களை தனதாக்கி, தன்னலம் மறந்து அயலானின் வளர்ச்சிக்காக உழைத்தவர். ஆன்மிக வாழ்வில் வளர்ச்சி அடைந்து மற்றுள்ளவரையும் ஆன்மீக வாழ்வில் வளர்ச்சி அயைட வழிகாட்டிவர். கிறிஸ்துவின் விழுமியங்களை நற்செய்கள் வழியாக வெளிக்கொணர்ந்து வாழ்ந்தவரே புனித அடிலெய்ட். இவர் 931ஆம் ஆண்டு பார்கன்டி அரசர் இரண்டாம் ருடால்ஃபின் மகளாகப் பிறந்தவர்.

      தனது 16ஆம் வயதில் லொதேயர் என்பவரை திருமணம் செய்தார். ஒரு குழந்தைக்கு தாயான தருணத்தில் கணவனை இழந்தார். இறைவன்மீது நம்பிக்கை கொண்ட அடிலெய்ட் பெரென்கர் அரசரின் மகனை திருணம் செய்து கொள்ள வற்புறுத்தினர். திருமணம் செய்து கொள்ள மறுத்தார் அடிலெய்ட். இக்காரணத்தால் அவரை சிறையில் அடைத்து துன்புறுத்தினர். துன்பத்தின் மத்தியில் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்.

           நான்கு மாதங்கள் கடந்தவேவையில் 951ஆம் ஆண்டு, ஜெர்மன் பேரரசர் ஒட்டோ முற்றுகையிட்டு பெரென்கரை வீழ்த்தினார். பேரரசர் ஒட்டோ, அடிலெய்ட் அழகில் மயங்கி அவரை திருமணம் செய்தார். சில நாள்களில் ஒட்டோ இறந்தார். அடிலெய்ட் முழுப்பொறுப்பேற்று ஆட்சி செய்த தருணத்தில் தனது சொந்த மகனால் அரண்மனை வாழ்விலிருந்து வெளியேற்றப்பட்டார்.

     அரண்மணை வாழ்விலிருந்து வெளியேறிய அடிலெய்ட் மைன்ஸ் மறைமாவட்ட ஆயர் புனித வில்லிஜிஸ் என்பவரின் வழிகாட்டுதலால் ஆன்மீக வாழ்வில் வளர்ச்சி அடைந்தார். கிறிஸ்துவின் வாழ்வுதரும் வார்த்தையை வாழ்வாக்கி சான்று பகர்ந்தார். அயலானின் வளர்ச்சிக்காக ஆர்வமுடன் உழைத்தார். அடிப்படை வசதிகள் இல்லாமல் துன்புற்ற மக்களுக்கு உதவினார். ஆலயங்கள் மற்றும் துறவு இல்லங்கள் கட்டினார். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்த அடிலெய்ட் 999ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment