Wednesday 14 November 2018

புனித லீமாரோஸ்

துன்பங்கள் இன்றி வாழ்க்கையில்லை. சிலுவை இல்லாமல் கிறிஸ்தவ வாழ்வு இல்லை  என்று உணர்ந்து கொண்டு, “ஆண்டவரே எனது துன்பத்தை அதிகமாக்கும். எனது இதயத்தில் உம்மீதுள்ள அன்பைப் பெருகச் செய்யும்” என்றுகூறி வாழ்நாள் முழுவதும் தனது துன்பத்தின் வழியாக இறைவனை மாட்சிமைப் படுத்தியவரே புனித லீமாரோஸ். இவர் தென் அமெரிக்காவில் பெரு நாட்டில் உள்ள லீமா என்னும் ஊரில் 1586ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் நாள் பிறந்தார்.           
                   

             குழந்தைப்பருவம் முதல் பெற்றோருக்குக் கீழ்ப்படிதல் உள்ளவராக வாழ்ந்து வந்தார்.. இவருக்கு  திருமுழுக்கின் போது இட்ட பெயர் இசபெல். குழந்தையாக இருந்தபோது ஒருமுறை இவரது முகம், ரோஜா மலர் போல் ஒளி வீசுவதை வீட்டில் உள்ளவர்கள் பார்க்க நேர்ந்தது. மேலும் குழந்தையாகத் தொட்டில் கிடந்த தருணம் ஓர் அழகிய ரோஜா மலர் தொட்டில் விழுவதை அவரது தாய் கண்டார். அன்று முதல் ரோஸ் என்று அழைக்கப்பட்டார். ரோஸ் துறவு மேற்கொண்டு இறைவனை அன்பு செய்யத் தீர்மானித்தார்.
                

         தனது 20ஆம் வயதில் புனித சாமிநாதரின் மூன்றாம் சபையில் சேர்ந்தார். ரோஸ் நோன்பு இருந்து தியாகச் செயல்கள் வழியாக இறைவனை மாட்சிமைப்படுத்தி தூயவராக வாழ்ந்து வந்தார். ஏழைகளிடம் மிகுந்த அன்பும், கரிசனையும், இரக்கமும் காட்டினார். ஏழைகளுக்கும், நோளிகளுக்கும், ஆதரவற்றோருக்கும் உதவினார். “நமது ஆன்மாவை விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லும் சாலை தான் சிலுவை. சிலுவையைத் தவிர விண்ணகத்திற்கு ஏறிச் செல்ல வேறு எந்த ஏணியும் இல்லை” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

             

            னது தியாக வாழ்வால் இறைவனை மாட்சிமைப்படுத்திய ரோஸ், கூர்மையான ஆணிகளால் செய்யப்பட்ட வளையம் ஒன்றை கிரீடமாகச் செய்து தலையில் அணிந்துகொண்டார். கூர்மையான ஆணிகள் குத்தி இரத்தம் வெளிவந்தது. இதையாரும் பார்க்காமல் மறைத்துக் கொள்வார். பக்கவாதத்தால் கடுமையாகத் தாக்குண்டார். 1617ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் நாள் இயற்கை எய்தினார். திருத்தந்தை 10ஆம் கிளமண்ட் 1671ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 2ஆம் நாள் புனிதர் நிலைக்கு உயர்த்தினார். இவர் தோட்டபணியாளர், மலர் விற்பனையாளர், தையல்காரர், இலத்தீன் அமெரிக்கா, அமெரிக்க பழங்குடியினர் ஆகியோரின் பாதுகாவலர்.  

No comments:

Post a Comment