மனித வாழ்விற்கான அழைப்பு தூய வாழ்விற்கான அழைப்பு ஆகும். ஒரு நல்ல மனிதன்மெய்யாகவே புனிதனாக இருக்கிறான். இறைநம்பிக்கை, மனித வாழ்வைப் புனித வாழ்வாகமாற்றுகிறது. தந்தையாம் கடவுளின் மாட்சியை தரணிக்குத் தந்த ஒரே மகனாம் இயேசுவை அறிந்து, அனுபவித்து, வாழ்வாக்கி, சான்று பகர்ந்து வாழ்வது தான் புனித வாழ்வு ஆகும். புனிதர்கள் அனைவரும், இறைவனால் தமக்கு வழங்கப்பட்ட தனிப்பட்டக் கொடைகளுக்கு
மதிப்பளித்து, இறை அழைத்தலுக்கு செவிமடுத்து, தன்னலமற்ற தியாக வாழ்வு வாழ்ந்தவர்கள். புனிதர்கள் ஒவ்வொருவரும் இறைமகன் கிறிஸ்துவை தமது மீட்பராக ஏற்றுக் கொண்டவர்கள். புனிதர்களில் பலர், எண்ணற்ற தியாகங்கள் செய்தது மட்டுமல்ல இரத்தம் சிந்தி தமது உயிரையே தியாகப்பலியாக்கி மறைசாட்சியாக இறந்தவர்கள்.
இயேசுவுக்காக இரத்தம் சிந்தி உயிர் துறந்த அனைவரையுமே தொடக்ககால திருச்சபை புனிதர்கள் என்றே அழைத்துள்ளது. .இதை புனித பேதுருவின் முதல் திருமுகத்திலே நாம் காணலாம். “ புனிதர்கள் யார்? ” என்று நாம் ஒவ்வொருவருமே நம்மில் கேட்டுப் பார்க்கின்றபோது, கிடைக்கின்ற பதில், “ புனிதர்கள் இறைவனின் திருவுளப்படி தங்கள் வாழ்வை அவருக்காகவே, அனைத்தையும் துறந்து, அர்ப்பணித்தவர்கள்.” என்பதுவே. ஆம்;. புனிதர்கள் வாழ்வு நமக்குக் கற்றுத் தரக்கூடியதும் அதுவே. புனிதர் என்றால் பாவங்களிருந்து விலக்கப்பட்டு, கடவுளின் அருட்பொழிவு பெற்றவர் ஆவார்.
புனிதர்கள் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைச் சுவடுகளில் நடந்தவர்கள். இருளிலும் துயரிலும், பலவீனங்களில் வீழ்ந்தும் எழுந்தும், காடு மேடு, பள்ளங்களைக் கடந்தும், கிறிஸ்துவின் ஒளியாக வாழ்ந்தவர்கள். ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவுக்கு நற்சான்று நல்கியவர்கள். புனிதர்கள் இவ்வுலகில் நம்மை விட்டு மறைந்தாலும், நம் அகவாழ்வில் மறையாமல் நம்மிடையேஅருள்மாரி பொழிகின்றவர்கள்.
செசிலியா, கிறிஸ்துவின் வீரர்களே! எழுவீர் இரவுக்கு உரியசெயல்களை விட்டுவிடுங்கள். ஒளியின் போராயுதத்தை அணிந்துகொள்ளுங்கள் என்று வீரமுழக்கம் செய்து இறுதிவரை இறைவனுக்காகவாழ்ந்தவரே புனித செசிலியா.புனித ஜோசப் குப்பெர்டினோ,“கடவுளைஅன்பு செய்; கடவுளின் அனபு ஒருவரிடம் ஆட்சி செய்யுமானால் அவரே உண்மையானச் செல்வந்தர்” என்று வாழ்க்கை அனுபவத்தால் மொழிந்தவர். ஆக்னஸ் “உனது வாளினால் என் இரத்தக்கறை படிந்தாலும் கிறிஸ்துவுக்குஅர்ப்பணமான எனது உடலை கறைப்படுத்த முடியாது” என்றார்.
பிரான்சிஸ் அசிசி “நான் பாவத்தில் வாழ்ந்திருக்கையில்தொழுநோயாளிகளைப் பார்க்க எனக்கு மிகவும் அருவருப்பாக, கசப்பாகஇருந்தது. ஆனால் ஆண்டவர் என்னை அவர்களிடையே அழைத்துச் சென்றார்.ஒரு சமயம் கசப்பாக இருந்த எனக்கு இப்போது ஆன்மாவுக்கும், உடலுக்கும்இனிமையாக இருக்கிறது. இதற்குப் பின் விரைவிலேயே நான் இவ்வுலகைத்துறந்தேன்” என்று கூறினார். புனித யோவான் பெர்க்மான்ஸ்,“நாம்ஏழைகளுக்குக் கொடுக்கும்போது கிறிஸ்துவுக்கே கொடுக்கிறோம்.கிறிஸ்துவின் அன்பு எம்மை ஆட்கொள்கிறது. இளைஞராக இருக்கும் போதுபுனிதராக மாறவில்லை என்றால் நான் ஒருபோதும் புனிதராகிடமுடியாது” என்றார்.
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் சிறந்த ஆளுமையும், அறிவும், அருளும் பெற்ற மாபெரும் தலைவராக திகழ்ந்தார். மரியன்னை மீது அதீத பற்றுகொன்றிந்தார், திருசெபமாலையில் ஒளியின் மறைபொருள் என்பதை புதியதாக அறிமுகம் செய்து இயேசுவின் வாழ்வை புனித மரியன்னையோடு இணைத்து செபிக்க உதவினார். இளையோர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி கடவுளின்பால் ஈர்த்தார், 1985 ஆம் ஆண்டு முதல் உலக இளையோர் மாநாட்டை தொடங்கி அவர்களுக்கு கிறிஸ்துவின் மதிப்பீடுகள் இலகுவாக சென்றடைய திருச்சபைக்கு வழிவகுத்தார். வாழும் போதே உலக மக்கள் அனைவராலும் பெரிதும் போற்றப்பட்டார், கருகலைப்பு, சிசுகொலை, மரணதண்டனை போன்ற அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தார். 2005, ஏப்ரல் 2, தனது 84வது வயதில் இயற்க்கை எய்தினார்.
No comments:
Post a Comment