Thursday 15 November 2018

புனித பெரிய ஆல்பர்ட்

நீதியும் அன்புமே நிரந்தர அமைதிக்கு அடிப்படை; இந்த இரண்டுமின்றி நீடிக்கும் அமைதி ஒருபோதும் நீடிக்காது. உலக அமைதிக்காக அன்னை மரியா காட்டும் வழிகளை நாம் கையாளவேண்டும் என்று கூறியவர்.  இறைஞானத்துடன் செயல்பட்டவர். ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தவர். ஆன்மிக வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்றடுத்தியவர். இவர் பாவாரியாவில் சுவாபியா போல்ஸ்தாத் பிரபுக்கள் பாரம்பரியத்தில் ஏறக்குறைய 1200ஆம் ஆண்டு பிறந்தார்.


              ஆல்பர்ட் சிறுவயது முதல் இறைபக்தியல் சிறந்து விளங்கினார். அனனை மரியாவை தன் தாயாக ஏற்றுக்கொண்டு அன்பிலும் நீதியிலும் ஒழுக்கத்திலும் அனைவருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். அன்னை மரியா காட்சி தந்து சாமிநாதர் சபை துறவியாகும்படி கேட்டுக்கொண்டார். கல்வியில் சிறந்து விளங்கிய ஆல்பர்ட் தனது பெற்றோரிடம் துறவற வாழ்வை மேற்கொள்ள அனுமதி கேட்டபோது அனுமதி மறுக்கப்பட்டது. பல எதிர்ப்புகளைத் தாண்டி 1223ஆம் ஆண்டு சாமிநாதர் சபையில் சேர்ந்தார்.


           ஆல்பர்ட் இறையியலில் முனைவர் பட்டம் பெற்று விரிவுரையாளராக கல்லூரியில் பணியாற்றினார். 1254ஆம் ஆண்டு சாமிநாதர் சபையில் 1254ஆம் ஆண்டு மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். மிகுந்த இறைஞானத்துடன் செயல்பட்டார். துறவிகளின் ஆன்ம நலனுக்காக கருத்துடன் செயல்பட்டார். ஆன்மீக வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்றடுத்தினார். இறைவார்த்தையின் அடிப்படையில் வாழ்வை கட்டியெழுப்பு வழிகாட்டினார்.

           1260ஆம் ஆண்டு ரீகன்ஸ்பர்க் மறைமாவட்டத்தின் ஆயராக பதவி ஏற்றார். இறைமக்களின் நலனுக்காக அரும்படுப்பட்டார். ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தார். அனைத்து மக்களும் இறையன்பிலும் சகோதர அன்பிலும் வளர்ந்திட வழிகாட்டினார். அன்னை மரியாவிடம் தனது மறைமாவட்ட மக்களை அர்ப்பணம் செய்தார். பகைமை உள்ள இடத்தில் அமைதியை ஏற்படுத்தினார்.இறைமக்களின் நலனுக்காக  உழைத்த ஆல்பர்ட் 1280ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 15ஆம் நாள் இறந்தார்.

No comments:

Post a Comment