Thursday 8 November 2018

புனித காட்ஃப்ரி

  
         ஏழைகள், நோயாளர்களை அன்புடன் கவனித்து, நற்பண்புகளின் நாயகனாக, இறையன்பின் பிறரன்பின் தூதராக வாழ்ந்தவர் புனித காட்ஃப்ரி. 
இவர் பிரான்ஸ் நாட்டில் மொலின்கோட் என்னுமிடத்தில் 1066ஆம் ஆண்டு பிறந்தார். சிறுவயதில் தாயை இழந்தார். இக்காரணத்தால் ஐந்து வயது முதல் ஆசிர்வாதப்பர் துறவு மடத்தில் தங்கி அன்பிலும், இறைஞானத்தலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கினார்.

துறவு மடத்தில் வாழ்ந்தபோது துறவிகளின் வாழ்க்கை முறைகளை தனதாக்கினார். இறைவனோடு உறவு கொண்டு தியான வாழ்வில் சிறந்து விளங்கினார். துறவு இல்லத்திற்கு வருகின்ற மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை பணக்காரர் என்று வேறுபாடு இல்லாமல் நன்கு உபசரித்தார். நோயார்களிடம் மிகுந்த அன்புகொண்டு நன்கு கவனித்துக்கொண்டார். அவர்களின் அருகில் அமர்ந்து பேசி மகிழ்விப்பார். தனது தலையில் அந்தோணியார் வட்டம் போட்டு உத்தம துறவியாக மாறினார்.

           ஒவ்வொரு நாளும் இறையன்பற்கும் சகோதர அன்பிற்கும் சான்றாக வாழ்ந்தார். காட்ஃப்ரி தனது வாழ்வை இறையாட்சி பணிக்காக அர்ப்பணிக்க விரும்பினார். குருத்துவ படிப்பை முடித்து குருவாக அருள்பொழிவு பெற்றா
ர். நோஜன்ட் என்ற இடத்திலுள்ள துறவு மடத்தின் தலைவராக பொறுப்பேற்றார். தலைவர் பொறுப்பில் இருந்தாலும் அனைவருக்கும் பணியாளராக பணிவிடைகள் செய்தார். 
அன்னை மரியாவிடம் மிகுந்த பற்றும் பக்கியும் கொண்டார். அன்னையின் துணையோடு செப, தவ வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.     
            செப வாழ்வை கைவிட்டு வாழ்ந்த துறவிகளை அன்புடன் திருத்தினார். துறவு இல்லத்தின் ஒழுங்குகளை சீர்படுத்தினார். தனது மறையுரை வழியாக இறைவனின் மாபெரும் கருணை, அன்பு, இரக்கம் ஆகியவற்றை எளியநடையில் எடுத்துரைத்தார். பஞ்சம் ஏற்பட்ட தருணத்தில் மக்களில் ஒருவராக இணைந்து நோன்பிருந்து மன்றாடி பஞ்சம் நீங்கிட வழிகாட்டினார். இறைவனுக்கும் இறைமக்களுக்கும் பணி செய்த காட்ஃப்ரி ஆயராக அருள்பொழிவு பெற்றார். தனது மறைமாட்ட மக்கள் இறைவனிடம் செல்ல நல்வழிகாட்டிய காட்ஃப்ரி 1115ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 8ஆம் நாள் மண்ணக வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்து விண்ணக வாழ்வில் நுழைந்தார்

No comments:

Post a Comment