Saturday 3 November 2018

புனித மார்ட்டின் தே போரஸ்

       
     வானதூதரை துணையாக பெற்றவர். இரக்கச் செயல்கள் வழியாக தூய்மை அடைந்தவர். செபம், தவம், இறைபக்தி ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். நோயளிகளுக்கும் ஏழைகளுக்கும் சேவை செய்தல் தனது முழுமுதற் கடமையாக கருதினார்.
 தாய் திருச்சபையின் மறையுண்மைகளையும், விவிலியம், அன்னை மரியாவை பற்றியும் மறைக்கல்வி வழிகாக கற்பித்தவர். தனது முன்மாதியான வாழ்க்கை வழியாக எண்ணமற்ற மக்களுக்கு இறைவழி காட்டியவரே புனித மார்ட்டின் தே போரஸ்.      

  

          இவர் பெரு நாட்டில் லீமா நகரில் 1579ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 9ஆம் நாள் ஏழ்மை மிகுந்த குடும்பத்தில் பிறந்தார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்தமாக்குவதை இலட்சியமாக கொண்டார்.   தனது 15ஆம் வயதில் லீமா நகரில் இருந்த சாமிநாதர் சபையில் வேலைக்கு சேர்ந்தார். சிறிய பொருப்புகளிலும் நம்பிக்கையுடன் செயல்பட்டார். நற்கருணை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் மிகுந்த அன்பு செலுத்தினார். அன்பு, தூய்மை, கீழ்ப்படிதல், தாழ்ச்சி என்ற புண்டியங்களில் சிறந்து விளங்கினார். இரவுநேரங்களில் ஞானநூல்கள், விவிலியம் ஆகியவற்றை படித்தார். தன்னொடுக்க செயல்களால் இறைவனை மாட்சிமைப்படுத்தினார்.

   

        ஏழைகளுக்கு உதவி செய்யும் குழுவில் இணைந்து பணியாற்றினார். இறைவார்த்தையின் வல்லமையால் நோயாளிகளை நலமாக்கினார். நோயுற்ற மக்களுக்கு நாளும் நன்மைகள் பல செய்தவர். நோயாளிகளுக்கு பாசத்துடன் பணியாற்றினார். புதுமை செய்யும் ஆற்றல் பெற்றிருந்தார். தன்னிடம் வந்த நோயளிகள்மீது திருசிலுவை வைத்து இயேசு நமாத்தின் சக்தியால் குணப்படுத்தினார். மார்ட்டின் அருகில் ஒரு வானதூர் இருந்தார். இறையொளி இவரை சுற்றிலும் சூழ்ந்திருக்கும்.                      

        

       ஏழைகளுக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்தினார். தன்னிடம் உள்ளதையும், பிறரிடம் கையோந்தி பெற்ற பொருட்கள், பணம் ஆகியவற்றை ஏழை மக்களுக்கு பகிர்ந்தளித்தார். தினமும் 160 ஏழை மக்களுக்கு உணவளித்தார். லீமா நகரில் கைவிடப்பட்ட மக்களுக்காக இல்லங்கள் அமைத்தார்.ஏழைகளின் தந்தையாக வாழ்ந்த மார்ட்டின் தே போரஸ் 1639ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 3ஆம் நாள் இறந்தார். திருத்தந்தை 23ஆம் யோவான் 1962ஆம் ஆண்டு மே திங்கள் 6ஆம் நாள் புனிதராக உயர்த்தினார்.  இவர் இருவேறு இனத்தவர்களுக்கு பிறந்தவர்கள், கறுப்பு நிறமுடையோரின் பாதுகாவலர்.

No comments:

Post a Comment